எர்வாமாட்டின் வேண்டாம், இந்த 'லேசர்' போதும்.!!
இளம் வயதில் தலைமுடி உதிர்வது இளைஞர்களுக்கு மிகப்பெரிய தலைவலி தான். இளம் வயதில் வழுக்கை தலையுடன் வாழ யாருக்குமே பிடிக்காது. வழுக்கை தலையுடன் உலகில் பெரும்பாலானோர் புலம்பி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
பின்னின்ஃபரினாவின் லேசர்பேன்டு 82 எனும் கருவியானது மருத்துவம் சார்ந்த லேசர் மூலம் தலைமுடியை வளர்க்க வழி செய்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.

வடிவமைப்பு
பார்க்க எளிமையாக காட்சியளிக்கும் இந்த கருவியானது மருத்துவ கருவிகளை போன்று விசித்திரமாக இல்லாததால் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைமுடி
உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் பேன்டு போன்று காட்சியளிக்கும் இந்த கருவியானது தலைமுடியை வரிசைப்படுத்தி உச்சந்தலையில் லேசர் சரியாக பட வழி செய்கின்றது. இதனால் உச்சந்தலையில் இருந்து தலைமுடியின் வேர் வரை லேசர் பரவும்.

சுலபம்
இந்த கருவியை கொண்டு மருத்துவமனைக்கு பதிலாக வீட்டில் இருந்த படி சிகிச்சை செய்து கொள்ள முடியும். இந்த சிகிச்சைக்கு அதிகபட்சம் 90 நொடிகள் மட்டுமே தேவைப்படும்.

அறிவுரை
நிறுவனத்தின் அறிவுரை படி வாரத்திற்கு மூன்று முறை இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.

சான்று
இந்த கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சான்றளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விற்பனை
அமெரிக்காவில் இந்த கருவியானது $795 (ரூ.53,109.98) விற்பனை செய்யப்படுகின்றது.
வீடியோ
இந்த கருவி எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை வீடியோவில் பாருங்கள்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications