பாகிஸ்தான் பைலட்களுக்கு ரஃபேல் விமான பயிற்சி உண்மையா? இந்தியாவிற்குக் கிடைத்தது பதில்.!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த ரஃபேல் போர் விமானங்கள் பற்றிய பல தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரித்து இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

இந்த ரஃபேல் போர் விமானங்கள் பற்றிய பல தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.

ரஃபேல் விமான பயிற்சி
அதேபோல் பாக்கிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானப்படை பைலட்டுகளுக்கு ரஃபேல் விமான பயிற்சி வழங்கியதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியைக் கேட்ட இந்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் பதில்
பாகிஸ்தான் விமானப்படை பைலட்களுக்கு பயிற்சி அளித்ததாக வெளியாகியுள்ள இந்த அதிர்ச்சி செய்தி குறித்து பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் பதில் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரருக்கும் ரஃபேல் விமான பயிற்சி வழங்கப்படவில்லை
இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் கூறியதாவது " பாக்கிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானப்படை பைலட்டுகளுக்கு ரஃபேல் விமான பயிற்சி வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், எந்த ஒரு பாகிஸ்தான் வீரருக்கும் ரஃபேல் விமான பயிற்சி வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

போலி செய்திகளை நம்ப வேண்டாம்
தற்பொழுது வெளியாகியுள்ள பாகிஸ்தான் தொடர்பான இந்த செய்திக்கு அவர் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற போலி செய்திகளை நம்பி பகிர வேண்டாம் இன்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications