நம் கிராமத்துக்கும் வந்தாச்சு இலவச வைபை-இனி ஜாலிதான்.!
கிராமங்கள் தோறும் சன்சாத் ஆதர்ஷ் கிராம யோனா திட்டத்தின் படி இலவச வைபை சேவையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்றத்திற்கு பிறகு, நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கிராமங்கள் தோறும் சன்சாத் ஆதர்ஷ் கிராம யோனா திட்டத்தின் படி இலவச வைபை சேவையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அமைச்சர் மனோஜ் சின்ஹா:
ஆதர்ஷ் கிராம யோன திட்டத்தின் படி அனைத்து இந்திய கிராமங்களுக்கும் இலவச வைபை சேவை மத்திய அரசால் வழங்கப்படும். இத்திட்டம் அனைத்து எம்பிகளால் செயல்படுத்தப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

முதல்கட்டமாக 25 ஆயிரம் வைபை:
இந்தியாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கு வைவை சேவை வழங்க பிஎஸ்என்எல் மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 25 ஆயிரம் பைபை ஹாட்பாட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2.5 லட்சம் பஞ்சாயத்துகளை இணைக்க:
2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் இணைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 2017 டிசம்பர் கணக்குபடி ஒரு லட்சம் பஞ்சாயத்துக் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 1.5 லட்சம் பஞ்சாயத்துக்கள் மார்ச் 2019ம் அதிவேக இணையத்துடன் இணைக்கப்படுகிறது.

கிராம பஞ்சாயத்துகளில் இணையம்:
கடந்த ஜூலை 15ம் தேதி கணக்குப்படி 1 லட்சத்து 13 ஆயிரத்து 091 கிராம பஞ்சாயத்துகள் அதிவேக இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் தீவிரவாதம்:
மாவோயிஸ்ட் (இடது சாரி) தீவிரவாதத்தால், பாதிக்கப்பட்ட 10 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அங்கு மொபைல் சேவைகள் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 335 பகுதிகளில் 4072 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் மனோஷ் சின்ஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications