நிலவுக்கு செல்ல இலவச டிக்கெட்: ஜப்பானிய தொழிலதிபர் முக்கிய அறிவிப்பு!
நிலவில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாசா அமைப்பு நிலவில் அதிகளவு நீர் இருக்கலாம் என்று தகவல் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக நம்பப்பட்டது.

ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள்நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக்கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகளின்படி சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர்இருக்கக்கூடும் என்று கூறுகின்றன.

இந்நிலையில் ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் இலவச டிக்கெட் மூலம் நிலவுக்கு செல்லும் வாய்ப்பை அறிவித்துள்ளார். மேலும்இது பற்றி சற்று விரிவான தகவலை பார்ப்போம்.

டியர் மூன்
வெளிவந்த தகவலின்படி, நிலவிற்கு செல்லும் 'டியர் மூன்" என்ற திட்டத்தில் வேலை செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சூப்பர் திட்டத்தை தொடங்கியது.

அதாவது மக்களை நிலவுக்கு அழைத்து செல்ல ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. பின்பு இந்தஸ்டார்ஷிப் விண்கலத்தில் பயணம் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து 8 பேரை தேர்ந்தெடுக்க இருப்பதாக ஜப்பானிய தொழிலதிபர் மொய்சவா
அறிவித்துள்ளார்.

குறிப்பாக இதுபற்றி எலான் மஸ்க் அவர்கள் கூறியது என்னவென்றால், நிலவில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போல பொது மக்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன். அதனால் என்னுடன் 8 பேரை அழைத்து செல்ல விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விண்வெளிக்கு பயணிக்க விருப்பம் உள்ளவர்களும், விண்வெளிக்கு செல்பவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பவர்களுக்கு இந்த இலவச டிக்கெட்டுகளை தரவுள்ளேன் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.


Click it and Unblock the Notifications