Just In
- 6 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 7 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 8 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 9 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாடுகளைக் கடந்த தரவுகளின் பகிர்வால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயனடையும்! – கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நம்பிக்கை!
“டிஜிட்டல் இந்தியா” என்னும் தொலை நோக்குத் திட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதியான உறுதுணையாக கூகுல் நிறுவனம் இருக்கும்
தடைகளற்ற தகவல் பகிர்வால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். உலக அளவில் விரிந்து பரவ நினைக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊக்கமடையும் என கூகுள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுந்தர் பிச்சை, இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இரவி சங்கர் பிரசாத் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
“டிஜிட்டல் இந்தியா” என்னும் தொலை நோக்குத் திட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதியான உறுதுணையாக கூகுல் நிறுவனம் இருக்கும் – என செப்டம்பர் 5 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு கடந்த மாதம் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இரவி பிரசாத் அவர்கள் வருகை புரிந்தமைக்காக நன்றியையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இரகசியம் மற்றும் பாதுகாப்பு
"பயனாளர்களின் இரகசியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மீறாத வகையில் நிகழும், நாடுகளைக் கடந்தத் தகவல் பரிமாற்றங்கள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும். உலகின் முன்னணி நிறுவனங்கள் டிஜிட்டல் இந்தியப் பொருளாதாரத்திற்குத் தங்களுடைய பங்களிப்பைச் செய்வதற்கும் துணையாக இருக்கும்" என சுந்தர் பிச்சை கருதுகிறார்.
"இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவன அதிகாரிகள் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அமைச்சருடன் நடந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விசயங்களைச் செயல்படுத்த முயற்சி எடுப்பார்கள்" எனவும் சுந்தர் பிச்சை கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணா
இது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு கூகுள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை.
இந்திய அரசாங்கம் இந்தியாவுக்கான தகவல் பாதுகாப்புக் கொள்கைகளை வடிவமைப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சந்திப்பும், கடிதமும் முக்கியத்துவம் பெறுகிறது.
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையிலான குழுவினர் தகவல் பாதுகாப்பு மசோதாவின் வரைவு நகல் மற்றும் பரிந்துரைகளை கடந்த ஜீலை மாதம் தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் சமா்ப்பித்துள்ளனர்.
தனிநபர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தகவல்கள்
தனிநபர் தொடர்பான தகவல் பாதுகாப்பு, தரவுகளை ஒருங்கிணைப்பவர்களின் கடமைகள், தனிநபர் உரிமைகள், உரிமை மீறலுக்கான தண்டனைகள் குறித்து இக்குழு தன்னுடைய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த மசோதா தொடர்பாகப் பொது மக்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கருத்துத் தெரிவிக்கலாம்.
தனிநபரின் பொதுவான தகவல்கள், தனிநபர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தகவல்கள், அவற்றுக்கான சம்மதம், விதிவிலக்குகள், தனிநபர் தகவல்களுக்கான சேமிப்பக வரையறை, தனிநபர்களுக்கான உரிமைகள் ஆகிய பல பிரிவுகளில் பரிந்துரைகள் அமைந்துள்ளன. நாடுகளைக் கடந்த தரவுகளின் பரிமாற்றத்திற்கான கட்டுப்பாடுகளையும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
பதிவிடப்படும் தரவுகளின் நகல்கள்
இந்தியாவில் பதிவிடப்படும் தரவுகளின் நகல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்கள் அல்லது தரவு மையங்களில் (data centre) சேமித்து வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளிலும் குறிப்பாக, மருத்துவம் மற்றும் நிதித் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இக்குழுவின் பரிந்துரைகள், வரவேற்பினையும் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.
இந்திய ஸ்டார்ட்அப்
பரிந்துரைகளில் உள்ள சில சரத்துக்கள் குறிப்பாக தரவுகளை உள்நாட்டு மையப்படுத்துதல் (data localisation ) போன்ற பிரிவுகள் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பாதிக்கும். பிற நாடுகளும் உள்நாட்டை மையப்படுத்திய தரவுகள் குறித்து யோசிக்க இது வழி வகுத்துவிடும் - என, இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (Internet and Mobile Association of India (IAMAI) ) கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இது செலவினையும், முழுமையான தீர்வுகளை வழங்காத தொழில் நுட்பங்களை நாடவேண்டிய சூழலையும் ஏற்படுத்திவிடும் எனவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470