இலவச Aadhaar அப்டேட்.. கடைசி தேதி மீண்டும் நீட்டிப்பு.. இனி சிரமம் இருக்காது.. இதோ முழு விவரம்..
நாட்டில் ஆதார் (Aadhaar) என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் வங்கிச் சேவைகள், அரசு திட்டங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் என அனைத்திற்கும் தேவைப்படும் ஆவணமாக உள்ளது. அதுவும் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை myAadhaar இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது பொதுமக்களிடையே இந்த சேவைக்கு அதிக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஆதார் விவரங்களை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்கும் திட்டத்தின் காலவரம்பை மத்திய அரசு 2027 ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. இதனால், ஆதார் அட்டைதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் 'myAadhaar' இணையதளத்தின் மூலம் தங்களின் விவரங்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக இதற்கு முன்னர் ஜூன் 2026 வரை தான் இந்த இலவச சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு உதவும் வகையில் தற்போது இந்த அவகாசத்தை ஜூன் 14, 2027-ஆம் ஆண்டு வரை UIDAI நீட்டித்துள்ளது.
அதேசமயம் myAadhaar ஆன்லைன் போர்ட்டல் மூலம் புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே இந்த இலவசச் சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி தங்களின் ஆவணங்களை ஜூன் 14, 2027-க்குள் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆதார் கார்டை பல ஆண்டுகளாகப் புதுப்பிக்காமல் பயன்படுத்தி வருபவர்கள் இந்த இலவச ஆன்லைன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, ஆதார் பெற்ற பிறகு வீடு மாற்றியிருந்தால், புதிய முகவரி விவரங்களை அப்டேட் செய்வது அவசியம். முகவரி சரியாக இல்லாததால் வங்கி சேவைகள், அரசு திட்டங்கள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆதார் சேவை மையங்களில் அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும், UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சில விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆதார் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
மொபைல் செயலி
அதேபோல் மொபைல் செயலிகளிலும் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்த பழைய 'mAadhaar' செயலி விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இந்த செயலிக்குப் பதிலாக மிகவும் எளிமையான மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்ட Aadhaar செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய ஆதார் செயலியில் பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீடு மூலம் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆதார் செயலி 3 மாதங்களுக்குள் 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் மக்களிடம் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது மக்கள் ஆதார் செயலியைப் பயன்படுத்தி செல்போன் எண் மற்றும் முகவரி அப்டேட்கள் போன்ற பல்வேறு சேவைகளை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் இதில் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அதுவும் இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஆதார் செயலியைப் பயன்படுத்தி தங்களது செல்போன் எண்களைப் புதுப்பித்துள்ளனர்.
குறிப்பாக 6 லட்சம் மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி தங்களது முகவரியைப் புதுப்பித்துள்ளனர். ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் ஐஒஎஸ் (Apple IOS ) ஆகிய இரண்டு இயங்குதளங்களில் Aadhaar செயலி பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications