ஏவுகணை 'வியாபாரம்' : இணையும் இந்தியா - ஃபிரான்ஸ்..!!
இந்தியாவின் ஆயத பலம் உலகமே வியக்கும் அளவு வளர்ச்சி அடைந்து வருவதற்கு மற்றும் ஓர் ஆதாரம் தான் இது. வாண்வெளி சார்ந்த ஆய்வுகள் மட்டுமின்றி ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதிலும் இந்தியா தலைசிறந்து விளங்குகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
நிலைமை இப்படி இருக்க இந்தியா மட்டும் ஃபிரான்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து ஏவுகணை ஒன்றை மேம்படுத்த இருக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில் பாருங்கள்...

ஒப்புதல்
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பிரமோஸ் ஏவுகணைகளுக்கு க்ரூஷியல் இன்டர்னல் கைடன்ஸ் தொழில்நுட்பம் வழங்க ஃபிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சஃப்ரான்
இந்த தொழில்நுட்பத்தை ப்ரென்ச் நிறுவனமான சஃப்ரான் வழங்க இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

பிரமோஸ்
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் திறன் குறித்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

சிறப்பம்சம்
முதலில் சூப்பர்சோனிக் வேகம் எடுத்து பின் இரண்டாக பிரிந்து இறுதியில் இலக்கை அதிவேகத்தில் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை தான் பிரமோஸ்.

தொழில்நுட்பம்
ஸ்டெல்த் தொழில்நுட்பம், கைடன்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் பிரமோஸ் ஏவுகணையை அதிநவீன தொழில்நுட்ப ஆயுதமாக வெளிப்படுத்துகின்றது.

இலக்கு
இந்த ஏவுகணை 290கிமீ தூரத்தில் இருக்கும் இலக்குகளை சூப்பர்சோனிக் வேகத்தில் துல்லியமாக தாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைமறிப்பு
இடைமறிப்பு செய்ய இயலாத அல்லது இடைமறிப்பை மிகவும் கடினமாக்கும் ஆயுத அமைப்பை பிரமோஸ் கொண்டிருக்கின்றது.

பலம்
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் பிரமோஸ் ஏவுகணையில் புதிய இன்டர்னல் கைடனஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் இதன் பலம் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

இந்தியா
இந்த தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை, மாறாக இது பிரமோஸ் ஏவுகணைக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications