உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பொதுவானவை, மோசடி செய்பவர்கள் அப்பாவி பயனர்களை ஏமாற்றுவதற்கான பல புதிய யுக்திகளை மற்றும் புதுமையான வழிகளைக் கண்டறிந்து பணத்தை அபேஸ் செய்து வருகின்றனர்.

தற்பொழுது லக்னோவைச் சேர்ந்த அமன் என்ற ஒருவர், உணவு விநியோக பயன்பாட்டின் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியை போனில் அழைத்து புகார் அளித்துள்ளார். புகார் அளித்த சிறிது நேரத்தில் அவரின் வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ .4 லட்சம் காணாமல் போய்யுள்ளது.

ஆன்லைன் இல் ஆர்டர் செய்திருக்கிறார், டெலிவரி செய்யப்பட்ட உணவில் குறைவுள்ளதைத் தெரிவிக்க வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியை போனில் தொடர்புகொண்டிருக்கிறார். இவர் பயன்படுத்திய உணவு டெலிவரி ஆப் இன் பராமரிப்பு எண்ணை வலைத்தளத்தில் இருந்து தேடி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அழைத்த என் போலி எண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவு விநியோக பயன்பாட்டிலிருந்து தன்னை நிர்வாகி என ஒருவர் அழைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் அவர் அமனின் குறைகளை கேட்ட பின் பணத்தைத் திரும்பி வழங்குவதாகக் கூறி ஒரு பயன்பாட்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தனது சேமிப்பு வங்கி கணக்கின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அமன் தனது வங்கி விபரங்களை பதிவு செய்ததும், அவர் மொபைல் எண்ணிற்கு ஓடிபி எண் அனுப்பப்பட்டுள்ளது. உணவு விநியோக பயன்பாட்டு அதிகாரிபோல் பேசியவர் ஓடிபி எண் விபரத்தைக் கேட்டிருக்கிறார். அமன் அவரின் பேச்சை நம்பி விபரங்களைக் கொடுத்த சில நொடிகளில் அமனின் வங்கி 4 லட்சம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
news source: indiatoday.in


Click it and Unblock the Notifications