பேட்டரி தொழில்நுட்பத்தில் பறக்கும் ஏர்டாக்ஸி சோதனை வெற்றி.!
பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கும் ஏர்டாக்ஸி சோதனை வெற்றிகரமாக கடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை செல்லுக் கூடியதாகும். 5 இருக்கைகளுடன் இருக்கும் வெற்றிகரமாக சோதனை
பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கும் ஏர்டாக்ஸி சோதனை வெற்றிகரமாக கடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இது மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை செல்லுக் கூடியதாகும்.

5 இருக்கைகளுடன் இருக்கும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதால், ஜெர்மன் நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கின்றது.

போக்குவரத்து நெரிசல் அதிகம்:
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் மக்கள் தொகையை காட்டிலும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது.
இதனால் நாம் வேறு இடத்திற்கு விரைவாக செல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்.

தீர்வு காண முனைப்பு:
இதற்கு தீர்வு காணும் வகையில், குறுகிய தூர வான் வழிப் போக்குவரத்து பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

ஜெர்மன் சோதனை வெற்றி:
இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்ஸி நிறுவனான வில்லியம், பறக்கும் காரை 2025ம் ஆண்டிற்குள் சோதனை செய்ய அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சோதனையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

5 இருக்கைகள் இருக்கும்:
தற்போது சோதனை செய்யப்பட்ட டாக்ஸில் 5 இருக்கைகள் இருக்கின்றது. இதற்கு வில்லியம் ஜெட் என பெயர் இடப்பட்டுள்ளது. இந்த கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம்.

பேட்டரி தொழில்நுட்பம்:
இது பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பறக்கும். கார் மணிக்கு 300 கிலோ மீரை பறக்க முடியும் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications