இந்தியாவில் மளிகை கடைகளை துவங்கும் பிளிப்கார்ட்.!
சில்லறை கடைகளை நடத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட உள்ளதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி இந்தியாவில் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை துவங்க பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மேலும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பிளிப்கார்ட் இந்தியாவில் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் உணவு பொருட்களின் சில்லறை வணிகத்தில் 100சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி உள்ள நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை துவங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பின்பு சமீபத்தில் அமேசான் நிறுவனம் உணவு பொருட்களுக்கான சில்லறை கடைகளை இந்தியாவில் துவங்க உள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் பிளிப்கார்ட்டும் இதில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை கடைகளை நடத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட உள்ளதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தால் அமேசான் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது என்றே கூறலாம். அதிலும் முகேஷ் அம்பானியின் தலைமையிலான இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பாகவே இருக்கும் என்றும் மற்ற ஆய்வுகளும் கூறுகின்றனவாம்.



Click it and Unblock the Notifications








