செப்டம்பர் 20 : ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் ஆரம்பம்.!
செப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த பிக் பில்லியன் டே சேல் துவக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாடு முழுவதும் ஃபிளிப்கார்ட் சேவைகள் அதிகமாக பயன்படுகிறது. அனைத்துப் பொருட்களையும் மிக தரமான முறையில் ஃபிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும். மேலும் தற்சமயம் ஃபிளிப்கார்ட் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஃபிளிப்கார்ட் வழங்கும் பிக் பில்லியன் டே சேல் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் இந்த ஃபிளிப்கார்ட் ஆபரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 20:
செப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த பிக் பில்லியன் டே சேல் துவக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, நான்கு நாட்கள் இந்த சிறப்பு தள்ளுபடி ஆபர் விற்பனையில் பல பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 சதவீதம்:
தற்போது ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 90 சதவீதம் தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, எனவே அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள்:
அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், மின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பேஷன் ஆடைகள், ஆபரணங்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ:
எக்ஸ்சேஞ் ஆபர், நோ காஸ்ட் இஎம்ஐ, கியாரன்டி மற்றும் பை நவ் பே லேட்டர் ஆகிய சிறப்பு சலுகைகளை எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டை பயனர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications