முயற்சி போதும் சார் எல்லாம் சாத்தியம்- பாலைவனத்தில் வளரும் மரங்கள்: அனைத்தும் இமைக்கா கண்கள் போல் வட்ட வடிவம்!
வடகிழக்கு செனகலில் உள்ள போகி டையாவ் நகரத்தின் மீது பறக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு பாலைவனத்தில் இமைக்காத கண்கள் போல் இருக்கும் வட்ட தோட்டங்களையும் புதிதாக விதைக்கப்பட்ட விதைகளையும் காணத் தவறவிட வேண்டாம். காட்சி அந்த அளவிற்கு வியக்க வைக்கும் வகையில் இருக்கும். உள்ளூரில் டோலோ கியூர் என்று அழைக்கப்படும் தோட்டங்களான இது கிரேட் க்ரீன் வால் திட்டத்தின் மிக சமீபத்திய அவதாரமாகும்.

செனகல் பாலைவனம்
எல்லைகளை மூடும்போது செனகலை விட்டு வெளியேற முடியாத செனகல் வேளாண் பொறியாளரான அலி டாய்யே அவர்களால் இது வடிவமைக்கப்பட்டது. இந்த முயற்சியானது 2007 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க யூனியனால் ஐரோப்பிய யூனியன், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு தொடங்கப்பட்டது.

10 மைல் அகலம் 4350 மைல் நீளம்
செனகல் முதல் ஜிபூட்டி வரை 10 மைல் அகலம் 4350 மைல் நீளமுள்ள சாஹல் பகுதி முழுவதும் மரங்களின் தொடர்வு நடவு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் வறண்ட சவன்னாவில் மரங்களை வளர்ப்பதில் இருக்கும் சிரமம் மற்றும் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கியது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய, ஐ.நா மதிப்பீடுகளின்படி ஒட்டுமொத்த திட்டமானது உறுதி செய்யப்பட்ட 100 மில்லியன் ஹெக்டேர் மரங்களில் 4% மட்டுமே நடவு செய்ய முடிந்தது. 2030 ஆம் ஆண்டு பகுதிக்குள் இது முழுமையாக முடிக்க 43 பில்லியன் டாலர் செலவாகும் என கூறப்படுகிறது.

புதிய உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறை
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட இந்த தோட்டம் ஆனது புதிய உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறையை குறிக்கிறது. பாலைவனத் தாக்கத்தில் இருந்து விடுபடவே இந்த திட்டமாகும். பப்பாளி மற்றும் மாம்பழம் போன்ற வெப்பமான வறண்ட காலநிலைகளுக்கு ஏற்ப தாவரங்கள் மற்றும் மரங்களையே தோட்டத்தில் காணலாம். இதன் உள்வளைவு வரிசைகளில் ஒன்றினை மருத்துவ தாவரங்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவத்தில் அமைப்பு
அனைத்தும் காரிய காரணங்களோடு இருந்தாலும் அது ஏன் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகள் வரலாம். அதற்கு காரணம் வட்டமான படுக்கைகளில் நடவு செய்யும் போது வேர்கள் உள்நோக்கி அனுமதிக்கின்றன. மேலும் இந்த அம்சம் திரவங்கள் மற்றும் பாக்டீரியாக்களை சிக்க வைக்கிறது. இதன்மூலம் நீர் தேக்கம் மற்றும் உரம் தயாரிப்பும் மேம்படுத்தப்படுகிறது.

டோலோ கியர் தோட்டம்
செனகலின் காடு வளர்ப்பு நிறுவனத்தின் தகவலின்படி, கோவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் தோராயமாக இரண்டு டஜன் எண்ணிக்கையிலான டோலோ கியர் தோட்டங்கள் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இது தொடங்கியது முதல் செழித்து வளர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக எல்லையை மூடும் கட்டாயம் ஏற்பட்டது, இதனால் வெளிநாட்டு உணவு மற்றும் மருந்துகளை நம்பியிருக்க வேண்டிய நிலை வந்தது, இதையடுத்து கிராமங்கள் தன்னிறைவு பெறும் திட்டத்தின் முயற்சியாக இந்த திட்டம் தோன்றியது.

நூற்றுக்கணக்கான தோட்டங்கள்
திட்டத்தின் தொடர்ச்சியாக இதுபோன்ற நூற்றுக்கணக்கான தோட்டங்கள் கட்டப்படும் என அமைப்பாளர்கள் நம்புகின்றனர். இந்த திட்டம் உணவு பாதுகாப்பை அதிகரிப்பதோடு பிராந்திய பாலைவனமாக்கலை குறைக்கும் எனவும் ஆயிரக்கணக்கான சமூக பணியாளர்களை உருவாக்கும் எனவும் நம்பப்படுகிறது.
File images


Click it and Unblock the Notifications