பேஸ்புக் வழியாக இரத்த தானம்; நம்பமுடியாத எண்ணிக்கை.!
ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாக தொடர்பு கொள்ள பேஸ்புக் மிகவும் உதவியாய் இருக்கும் என்று சோஷியல் பிளட் நிறுவனத்தின் துணை தலைவர் நயோமி கிளெய்ட் தகவல் தெரிவித்துள்ளார்.
பேஸபுக் பொறுத்தவரை பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி பேஸ்புக் ரத்த தானம் அம்சத்தில் இப்போது அதிகளவில் இந்திய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த செயல்பாடு பலருக்கு உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த பேஸ்புக் ரத்த தானம் அம்சம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது,மேலும் பேஸ்புக் நிறுவனம் பொறுத்தவரை பல்வேறு சிறப்பு சேவைகளை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

40 லட்சம்:
இந்த பேஸ்புக் ரத்த தானம் அம்சம் பொறுத்தவரை 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர், மேலும் இந்த அம்சத்தை வங்கதேசத்திலும் வழங்க முடிவு செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

நயோமி கிளெய்ட்:
ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாக தொடர்பு கொள்ள பேஸ்புக் மிகவும் உதவியாய் இருக்கும் என்று சோஷியல்
பிளட் நிறுவனத்தின் துணை தலைவர் நயோமி கிளெய்ட் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அம்சங்கள் இந்த பேஸ்புக் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

பேடெர்ன்அங்கீகாரம் :
பேஸ்புக் பதிவுகள் மற்றும் நேரலை போன்றவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துகளை ஒருவர் பயன்படுத்தினால் பேடெர்ன்அங்கீகாரம்
என்ற வழிமுறையை பயன்படுத்தி கண்டிப்பாக பேஸ்புக் கண்டறியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் உதவி:
பேஸ்புக் நண்பர்கள் மனசோர்வில் இருக்கும் போது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்யும் என பேஸ்புக் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணைதலைவர் கை ரோசென் தகவல் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் வாட்ஸ் :
பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் இந்த பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய ஷார்ட்கட்:
பேஸ்புக் பொறுத்தவரை பதிவுகளில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்ட்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது,
அதன்படி இந்த புதிய ஷார்ட்கட் அம்சம் விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications