"ஆண் கைதிகள் சிறையில் என்னை அடைக்க நினைத்தார்கள்..!"
அரபு நாடுகளில் இருப்பது போல் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லுங்கள், நி்ச்சயமாக யோசிப்பார்கள், பின் வாயை மூடிக் கொள்வார்கள்..!

"இங்கே என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை. எனக்கு பேச கூட அனுமதி தர மறுக்கிறார்கள். என்னை ஆண் கைதிகள் சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்கள்.. எனக்கு பயமாக இருக்கிறது..!" என்று கதறுகிறார், அபுதாபியில் கைதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோடி மகி.

39 வயது நிரம்பிய கிராஃபிக் டிசைனர் ஆசிரியை ஆன இவர், தன் அபார்ட்மண்ட் கார் பார்கிங்கில், மாற்று திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில், ஒரு கார் நின்று கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து, யாரையும், எந்த இடத்தையும் குறிப்பிடாமல் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்து உள்ளார். அவ்வளவு தான், இவர் 'சமூக வலைதளத்தில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்' என்று குற்றம் சுமத்தி மகியை கைதி செய்துள்ளது அபுதாபி அரசாங்கம்..!
துபாயை முந்தியது நம்ம பெங்களூர்..!
இது தவறு, இது மனித உரிமை மீறல், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று நாம் கூறினால் கூட அங்கே கைது செய்வார்கள் போல..!? - இது தான் உங்க கடுமையான சட்டங்களா..?! ரொம்ப கேவலாமா இருக்கு..!


Click it and Unblock the Notifications