15 வருட வலி : பிரிந்து போன தாய் - மகனை சேர்த்த ஃபேஸ்புக் போஸ்ட்..!
காதல், நட்பு என ஃபேஸ்புக் பலரையும் பிரித்து வைக்கும் 'சகுனி' வேலையை அருமையாக செய்வது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் சேர்த்து வைக்கும் 'ஹீரோ' கடமையையும் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இதை விட அழகான எடுத்துக்காட்டே இல்லை எனலாம்..!

3 வயதாக இருக்கும் போதே சொந்த தந்தையால் மெக்ஸ்சிகோவிற்கு கடத்தப்பட்டு, தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டவர் ஜோனதன்.
ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

அவரின் தாயான ஹோப் ஹோலாண்ட், தன் குழந்தையை பிரிந்த நாள் முதல் குழந்தைகள் நல மையம், தனியார் காவல் உதவிகள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் நம்பிக்கையுடன் தன் மகனை 15 ஆண்டுகள் விடாது தேடிய நிலையில், ஒரு ஃபேஸ்புக் போஸ்ட் இந்த தேடல் கதையை முடித்து வைத்துள்ளது..!

கடந்த ஆண்டு ஜோனதன் தன் குழந்தை பருவ போட்டோ ஒன்றை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். அது ஹோப் கண்ணில் பட்டு விட, பிரிந்து போன தன் மகனை கண்டுபிடித்துள்ளார், ஹோப். எல்லா புகழும் ஃபேஸ்புக்குக்கே..!


Click it and Unblock the Notifications








