Just In
- 46 min ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 3 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 3 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 4 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
எச்.ராஜா வீட்டருகே பெரியார் சிலை.. அகற்றிய காரைக்குடி போலீஸ்! "பாஜக ஆட்சியா?" என கொந்தளிக்கும் திவிக
- Movies
Ayali Web Series Review: வயசுக்கு வந்ததையே மறைத்து ஊரைத் திருத்த போராடும் தமிழ்.. அயலி விமர்சனம்!
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எல்லையில் நடந்த பரபரப்பு: சார்.,காதலியை பார்க்கனும் ஒரு எட்டு பாகிஸ்தான் போயிட்டு வரேன்!
பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலின் காரணமாக தனது காதலியை நேரில் காண இந்திய எல்லையை கடக்க முயன்ற மகாராஷ்டிரா இளைஞர் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார்.

பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கே கட்டுபாடுகள் விதிகக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க ஒருவர் நாடு விட்டு நாடு நடந்தே செல்ல முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

காதலாக மாறிய பேஸ்புக் நட்பு
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் பகுதியை சேர்ந்தவர் சித்தி முகமது ஜிஷன், 20 வயதான இவர் பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஷா பைசல் நகரில் உள்ள சாம்ரா என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாகியுள்ளார். காலப்போக்கில் இருவரும் காதலிக்கு ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் முகமது தனது காதலியை பார்க்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் நாட்டுக்கு தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டுள்ளார்.

ஜிபிஎஸ் உதவியுடன் பயணம்
பாகிஸ்தான் நாட்டுக்கு மகாராஷ்டிராவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மூலம் புறப்பட்ட முகமது ஜிபிஎஸ் உதவியுடன் குஜராத் பகுதியின் ரான் ஆஃப் கட்ச் பகுதியை அடைந்துள்ளார். அங்கு ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாகிஸ்தான் எல்லையை நடந்தே கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.

மயங்கி கீழே விழுந்துள்ளார்
முகமது சிறது தூரம் நடந்த சென்ற நிலையில் திடீரென அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை பார்த்த எல்லை பாதுகாப்புப் படையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எல்லையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன் இளைஞரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது
அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கராச்சியில் உள்ள தனது காதலியை காண பாகிஸ்தான் செல்ல முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து முகமது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது குடும்பத்தினர் அவரை காணவில்லை என போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
file images
source: indiatoday.in
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470