பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்ஸி-க்கு கடும் எதிர்ப்பு.!
பின்பு நிதி தீவிரவாதத்துக்கு லிப்ரா வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்து வருகின்றன
பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயறச்சியை செயல்படுத்திவந்துகொண்டே தான் இருக்கிறது. அன்மையில் இந்நிறுவனம் லிப்ரா எனும் கிர்டோகரன்ஸியை அறிமுகம் செய்து, இதற்கு சர்வதேச நிதி ஒழுங்குமுறையின் கீழ் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

லிப்ரா எனும் க்ரிப்டோகரன்ஸி
பேஸ்புக் நிறுவனம் நெட்வொர்க்கிங் துறைக்கு அடுத்தபடியான ஆன்லைன் வர்த்தகம், பணப்பரிமாற்ற தொழில்நுட்பம் ஆகிய
துறைகளுக்குள் கால்பதிக்க முயன்று வருகிறது.
குறிப்பாக அடுத்த ஆண்டு லிப்ரா எனும் க்ரிப்டோகரன்ஸியை அறிமுகப்படுத்த உள்ளதாக அன்மையில் பேஸ்புக் தெரிவித்து.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்
இந்நிலையில் பேஸ்புக் போன்ற தனியார் நிறுவனம் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகம் செய்தால். பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

ப்ருனோ லீ மேர்
குறிப்பாக பிரெஞ்சு நிதி அமைச்சர் ப்ருனோ லீ மேர் இதுபோன்ற நாணயங்களை அரசுதான் வெளியிட முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் லிப்ரா வாடிக்கையாளர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காமலும் இருக்கமென் பேஸ்புக் உறுதியளிக்க வேண்டும் என்றார்.

உபேர், விசா, மாஸ்டர்கார்ட்
பின்பு நிதி தீவிரவாதத்துக்கு லிப்ரா வழிவகை செய்யக்கூடாது என்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்து வருகின்றன, மேலும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றுக்கும் உபயோகம் அளிக்கும் வகையில் லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்ஸி உபேர், விசா, மாஸ்டர்கார்ட் மற்றும் பேபால் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 2020-அறிமுகம்
செய்யப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications