Just In
- 1 hr ago அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- 2 hrs ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
- 2 hrs ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
Don't Miss
- Automobiles எல்லாரும் ராயல் என்ஃபீல்டை தேடி ஓடி வருவதற்கு காரணம் என்னவா இருக்கும்? கவாஸாகி ரொம்ப போராடுது!!
- News பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்.. எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்: போட்டு தாக்கிய ஸ்டாலின்
- Sports IPL 2024 : சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த கிங் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை!
- Lifestyle 1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்...
- Finance போயிங் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா.. கோளாறு நிறைந்த 737 MAX விமானம்..!!
- Movies Lokesh kanagaraj: இனிமேல் பாடலை பார்த்து விஜய் என்ன சொல்வார்.. லோகேஷ் சொன்னத பாருங்க!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்.!
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகள் முழுவதும் அதிகள மக்கள் பயன்படுத்துகின்றார்கள், குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக்பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கின.
இந்நிலையில் 60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம். மேலும் இந்த சர்ச்சை குறித்து தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் அலைபேசி நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவரது நன்பர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பேஸ்புக் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன்
பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிளாக்பெரி ஹெச்டிசி, மைக்ரோசாஃப்ட்,அமேசான், சாம்சங் போன்ற 60 நிறுவனங்கள் பேஸ்புக் தகவல்களை பயன்படுத்தி வந்ததாக அந்நிறுவனத்தின் சேவை பிரிவு துணை தலைவர் ஐம் ஆர்கிபாங் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்ப வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இப்போது இருக்கும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பேஸ்புக் கொண்டுவந்தாலும் மக்கள் பேஸ்புக் மீதான நம்பிக்கை குறைந்து இருக்கிறது.
இப்போது பயன்பட்டு வரும் இணையவேகத்தை விட, அதிவேக இணைய வேகத்தை கொடுக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த டெராகிராஃப் வசதி. மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் உலகம் முழுவதும அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் கொண்டுவந்துள்ள இந்த டெராகிராஃப் தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் விரைவில் பொருத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கான சோதனைகளை வரும் 2019-ஆம் ஆண்டில் துவங்கும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470