ஃபேஸ்புக் தான் காரணமா..??
"எண்ணமா மார்க் இப்படி பண்றீங்களே மா..?" - என அனைவரையும் கேள்வி கேட்க வைக்கும் பகீர் தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
ஒரு விஷயம் நன்றாக இருந்தால், ஒரு விஷயம் கெட்டதாக இருக்கும் என்பதே உண்மை. அப்படியாக ஃபேஸ்புக் அனைவருக்கும் நன்மையை விளைவிக்கின்ற நிலையில் இதில் தீங்கும் நிறைந்திருக்கின்றது என்கின்றது சமீபத்திய ஆய்வு முடிவுகள்..!

வதந்தி
ஃபேஸ்புக் பயன்பாடு அதை செய்யும், இதை செய்யும் என பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஆய்வு
இது போன்ற வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே சில ஆய்வுகள் இருக்கின்றன.

முடிவு
ஃபேஸ்புக் பயன்பாடு குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் சார்ந்த தொகுப்பு தான் இது.

மன அழுத்தம்
அதாவது ஃபேஸ்புக் தளத்தில் 300க்கும் மேற்பட்ட நண்பர்களை வைத்திருப்போருக்கு மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கனடா ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

விருப்பம்
மேலும் நண்பர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லைக் மற்றும் கமென்ட்களை பதிவு செய்யும் இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

முதல் முறை
மனித குலத்தின் நன்மைக்காக ஃபேஸ்புக் தளத்தின் தீமைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கேற்பு
இந்த ஆய்வில் 12 முதல் 17 வயதுடைய 88 பேர் பங்கேற்றனர், அவர்களிடம் அவர்களின் ஃபேஸ்புக் பயன்பாடு குறித்த கேல்விகள் கேட்கப்பட்டன.

கேள்வி
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஃபேஸ்புக் நண்பர்கள் எண்ணிக்கை, தினசரி பயன்பாடு, சொந்த விளம்பர நோக்கம், நண்பர்களுக்கு உதவும் செயல் உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் ஒரு நாளுக்கு நான்கு முறை என தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு கேட்கப்பட்டன.

முடிவுகள்
இதில் ஃபேஸ்புக்கில் 300 நண்பர்களுக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள் குறைந்த அளவிலான மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுவதாகவும், 1000 முதல் 2000 நண்பர்களை வைத்திருப்போர் அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications