Just In
- 4 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 5 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 5 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 6 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மார்க் செயல் சுத்தப்படாது: கோபமடைந்த பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு- என்ன நடக்கிறது?
கடந்த வாரம் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் எடுத்த முடிவை எதிர்த்து சில பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட் காவல்துறை கைது நடவடிக்கையின்போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருப்பின அடக்குமுறைக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி நடக்கும் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசுக்கு எதிராக கண்டித்து முழக்கம்
மினபொலிஸ் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து, அரசுக்கு எதிராக கண்டித்து முழக்கமிட்டனர். நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர். கொரோனா பரவல் நேரத்தில் போராட்டம் நடந்தது.
இந்தியருக்கு 1லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.! காரணம் இதுதான்.!
போராட்டம் நடத்தியவர்கள் கைது
போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். அதேபோல் புரூக்ளின் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, போலீசார் விரட்டியடித்தனர். அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.
வெள்ளைமாளிகை முன்பாக திரண்டு போராட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன், வெள்ளைமாளிகை முன்பாக திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகையிலுள்ள சுரங்க அறைக்கு அதிபர் ட்ரம்ப் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு சுரங்க அறையில் சுமார் ஒரு மணி நேரம் ட்ரம்ப் தங்கவைக்கப்பட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக தனது டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நேரத்தில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பதிவு பெரும் விவாதத்துக்கு உள்ளானது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்
டிரம்ப் பதிவிட்ட பதிவானது., போராட்டம் என்ற பெயரில் கருப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு வன்முறையானது என டுவிட்டர் பக்கம் அமெரிக்க அதிபர் டுவிட்டை நீக்கியது.
இருப்பினும் பேஸ்புக் இந்த பதிவை நீக்காமல் இருந்தது.
மார்க் சக்கர்பெர்க் மீது கடும் விமர்சனங்கள்
பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மீது கடும் விமர்சனங்களை குவித்தது. பேஸ்புக் எதற்காக பதிவை நீக்கவில்லை என மார்க் சக்கர்பெர்க் பதிலளித்தார்., அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் பதிவு அரசு அறிவிப்பாகவே உள்ளது எனவும் இந்த பதிவு பேஸ்புக் சட்டத்திட்டங்களுக்கு புறம்பானதாக இருக்கிறது என தான் கருதவில்லை எனவும் மார்க் தெரிவித்திருந்தார்.
பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு
மார்க் இந்த கருத்து பேஸ்புக் ஊழியர்களை திருப்தி படுத்தவில்லை. இதையடுத்து டிரம்ப்-ன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் மார்க் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் தங்கள் முடிவை வெளிகாட்டும் விதமாக வெளிநடப்பு செய்துள்ளனர்.
சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?
வெளிநடப்பு செய்த ஊழியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை
வெளிநடப்பு செய்வதன் ஒரு பகுதியாக, ஊழியர்கள் ஒருநாள் வேலையை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஊழியர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சம்பளத்தை குறைப்பது, நேரத்தை குறைப்பது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லலை என்பது குறிப்பிடத்தக்கது.
source: cnn.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470