2021 ஜூலை வரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி: பேஸ்புக் அறிவிப்பு
அன்மையில் வெளிவந்த தகவலின்படி அடுத்த ஆண்டு ஜூலை வரை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற பேஸ்புக் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக கொரோனா தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மிகக்குறைந்தஅளவிலான ஊழியர்களுடன் அலுவலகங்கள் திறக்கப்படும் என பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அன்மையில்கூறியுள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு இறுதி வரை அலுவலங்களை திறக்க வாய்ப்பில்லை என்றும் பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் 2021 ஜூலை ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிப்பதாகவும், வீட்டு அலுவலக தேவைகளுக்கு இந்திய மதிப்பில் 75ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோன்றுஊழியர்கள் வரும் 2021 ஜூன் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார். குறிப்பாக மின்னஞ்சல் மூலம் தனது நிறுவன ஊழியர்களுக்கு அவர் தெரிவித்தது என்னவென்றால், வரும் ஜூன் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை நீட்டித்துள்ளோம் எனவும், இது உலகில் உள்ள அனைத்து கூகுள் அலுவலங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் ஊழியர்ளகள் கூகுளில் பணி செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் மும்பை, குர்கான், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் மாதிரியான நகரங்களில் கூகுள் அலுவலங்கள் செயல்பட்ட வருகிறது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் பாதிப்பு விகிதத்தை பொறுத்து அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications