இந்திய கிராமங்களில் வை-பை, ஃபேஸ்புக்-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்..!
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவின் கிராமபுறங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கின்றது.
இதன் மூலம் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் அமைந்திருக்கும் கிராமபுறங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட இருக்கின்றது.

திட்டம்
மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமபுறங்களில் வைபை வழங்க பிஎஸ்என்எல் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணம்
இந்த ஒப்பந்தத்தின் படி ஃபேஸ்புக் நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 5 கோடி வரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி
இந்தியாவின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் சுமார் 100 வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

நிறுவனம்
இந்த ஹாட்ஸ்பாட்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தேர்ந்தெடுத்த குவாட் சென் எனும் நிறுவனம் கட்டமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம்
இதுவரை இந்த திட்டத்தின் முதற்கட்டமாத சுமார் 25 ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட்டுள்ளது.

லாபம்
ஃபேஸ்புக் நிறுவனம் இதில் முதலீடு செய்வதோடு லாபம் ஏதும் எதிர்பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்த காலம்
ஃபேஸ்புக் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களிடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதோடு இந்த ஒப்பந்தமானது மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அமைச்சர்
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய சில மத்திய அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஹாட்ஸ்பாட்
வணிக ரீதியாக மேற்கு மற்றும் தென் இந்தியாவில் குவாட் சென் நிறுவனம் சுமார் 2000 வைபை ஹாட்ஸ்பாட்களையும், ட்ரைமேக்ஸ் நிறுவனம் சுமார் 500 ஹாட்ஸ்பாட்களை வட இந்தியாவிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications