Home
News

கொரானாவிலிருந்து மீண்டு வருமா நிலக்கரி தொழில்? நமக்கு கவலையில்லை!

அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எரிசக்தி புள்ளிவிவரங்களின் படி, முதன்முறையாக 2020 ஆம் ஆண்டு முழுவதும் நிலக்கரியை விட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகளவில் மின்சாரம் தயாரிக்கும் பாதையில் வெற்றிநடைபோடுகிறது என்பதைக் காட்டுகிறது.

கொரானாவிலிருந்து மீண்டு வருமா நிலக்கரி தொழில்? நமக்கு கவலையில்லை!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சில நிலக்கரி ஆலைகள் பராமரிப்பில் இருந்தபோது,நீங்கள் கவனிக்காத நிலையில் ​​அமெரிக்கா ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மைல்கல்லை சுருக்கமான மற்றும் திட்டமிடப்படாத மாதத்திற்கு அடைந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில், கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தலைகீழாக திருப்பியுள்ள நிலையில், இதில் நாம் ஆற்றலை உற்பத்தி செய்து நுகரும் முறையும் அடங்கும்.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (ஈஐஏ) ஒரு புதிய அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் நாடு 5 சதவிகிதம் குறைவான மொத்த மின்சக்தியை உற்பத்தி செய்யும் என்று கணித்துள்ளது. இது கார்பன் உமிழ்வுகளில் வரலாறு காணாத வகையில் 11 சதவீத வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.உண்மையில் வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்க நிலக்கரி உற்பத்தி கிட்டத்தட்ட 25 சதவிகிதம் குறையும் என்று EIA எதிர்பார்க்கிறது. இம்முறை அது அதே அளவிற்கு மீட்கப்படாமல் போகலாம்.

அடுத்த வருடம் பொருளாதாரம் சரிந்திருக்கும் நிலையில், படிப்படியாக வீட்டிலிருந்து வேலைசெய்தல் படிப்படியாக குறைக்கப்பட்டால் , நாட்டின் கார்பன் உமிழ்வு மீண்டும் அதிகரிக்கும் என்று EIA உறுதியாக நம்புகிறது. ஆனால் சுமார் 5 சதவீதம் மட்டுமே, அதற்கும் நிலக்கரி காரணமல்ல. 2021 ஆம் ஆண்டில், நிலக்கரி நுகர்வு 10 சதவிகிதம் அல்லது அதற்கு கூடக்குறைய மட்டுமே மீட்கப்படும் என்று இந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்கவை வெகுவாக உயர்ந்து மீதமுள்ள மந்தநிலையை இடத்தை கைப்பற்றும்‌.

இவை நிச்சயமாக கணிப்புகள் மட்டுமே. ஆனால் காற்றாலை மற்றும் சூரியசக்தி முன்னெப்போதையும் விட மலிவு பெறும்போது, ​​புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து மின்சார உற்பத்தி 11 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று EIA கருதுகிறது.

"2020 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வேகமாக வளர்ந்து வரும் மின்சார உற்பத்தியாக EIA எதிர்பார்க்கிறது என்றாலும், COVID-19 தொடர்பான பொருளாதார மந்தநிலையின் விளைவுகள் அடுத்த சில மாதங்களில் புதிய உற்பத்தி திறன் மேம்பாடுகளை பாதிக்கும். 2020 ஆம் ஆண்டில் மின்சாரத் துறை 20.4 ஜிகாவாட் புதிய காற்றாலைத் திறனையும், 12.7 ஜிகாவாட் பயன்பாட்டு அளவிலான சூரியசக்தி திறனையும் சேர்க்கும் என்று EIA எதிர்பார்க்கிறது. இருப்பினும், இந்த கணிப்புகள் அதிக அளவு நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டுள்ளன‌.மேலும் இதுபோன்ற திட்டமிடப்பட்ட திறன் மேம்பாடுகளை EIA தொடர்ந்து கண்காணிக்கும்." என்று அறிக்கை கூறுகிறது.

எளிமையாகச் கூறவேண்டுமானால், நிலக்கரிக்கான மாற்று வழிகள் மலிவானதாகவும், பெரும் போட்டித்தன்மையுடனும் வருகின்றன. இந்த குறிப்பிட்ட புதைபடிவ எரிபொருட்களின் மரணத்தின் இறுதி முத்தம் தான் தற்போதைய தொற்றுநோய் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.


" நிலக்கரி தொழில் ஒருபோதும் மீளாத வகையில், இந்த ஆண்டு நிலக்கரி உமிழ்வை கொரானா வைரஸ் குறைக்கும். இந்தியா மற்றும் பிற இடங்களில் தொடர்ந்து வலுவாக நிலக்கரி தொழில் இருந்தாலும், இது நிச்சயமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கை எரிவாயு விலைகள், சாதனை மலிவான சூரிய மற்றும் காற்றாலை, காலநிலை மற்றும் சுகாதார கவலைகள் ஆகியவை இந்த தொழில்துறையை நிரந்தரமாக முடக்கிவிடும்." என்கிறார் குளோபல் கார்பன் திட்டத்தின் தலைவர் ராப் ஜாக்சன்.

Best Mobiles in India

English summary
Experts Think The Coal Industry May Never Recover From The Pandemic, And We're Not Sad: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X