Home
News

8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.!

இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக நேரம் செல்போன் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகின்றன சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.
எனவே தற்சமயம் ஸ்மார்ட்போன் பயன்பாடு முன்பை விட அதிகளவு உள்ளது.

கல்லூரிகள் தங்களது

குறிப்பிட்ட சில பள்ளி, கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் எழுந்தும் வருகிறது. காரணம், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்கள் போன்ற
சாதனங்கள் இல்லாத மாணவர்கள் எப்படி வகுப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது

செல்போனில் பாட்டுக்கேட்டதை

இந்நிலையில் செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் பங்காளப்புதூர் அருகே இருக்கும் நஞ்சைபுளியம்பட்டி பரிசல் வீதியை சேர்ந்தவர் வேலுமணி (55) கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி சகுந்தலா. இவர்களது மகள் ஹேமா மாலினி (14).

அந்தப்பகுதியில் உள்ள அரசு

ஹேமா மாலினி அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சகுந்தலாவும், வேலுமணியும் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டனர். ஹேமா மாலினி மட்டும் வீட்டில் இருந்தார். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கரும் புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனே இதுபற்றி வேலுமணிக்கு தகவல் கொடுத்தனர்.

பதறியபடி உடனே வீட்டுக்கு

தொடர்ந்து அவர் பதறியபடி உடனே வீட்டுக்கு வந்தார், அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சமையல் அறையில் ஹேமா மாலினி உடல் கருகிய நிலையில்பிணமாக கிடந்தார்.

வேலுமணி பங்களாப்புதூர்

மேலும் இதுபற்ற வேலுமணி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்பு சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் அந்த பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். கடந்த வாரம் ஆன்லைன் வகுப்புக்காக ஹேமா மாலினிக்கு வேலுமணி செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

 தீக்குளித்து

ஆனால் ஹேமா மாலினி செல்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டு வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர், இதனால் மனம் உடைந்த ஹேமா மாலினி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Best Mobiles in India

English summary
Erode 8th grade school girl commits suicide for not allowing to listen music on smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X