எப்சன் களமிறக்கும் புதிய ஆன்ட்ராய்டு மூக்கு கண்ணாடிகள்

By Karthikeyan
|
எப்சன் களமிறக்கும் புதிய ஆன்ட்ராய்டு மூக்கு கண்ணாடிகள்

பிரிண்டர்களைத் தயாரித்து வழங்குவதில் பிரபலமாக இருக்கும் எப்சன் நிறுவனம் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் அமைந்த மூக்குக் கண்ணாடிகளை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த கண்ணாடிகளுக்கு மூவரியோ பிடி-100 என்று பெயர் சூட்டியிருக்கிறது. இந்த கண்ணாடிகள் ரூ.42,900க்கு விற்கப்பட இருக்கின்றன.

முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் வந்திருக்கும் இந்த கண்ணாடிகள் வழியாக 5 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருப்பவற்றைக் கூட 80 இன்ச் அளவிற்கு பார்க்க முடியும்.

இந்த மூக்குக் கண்ணாடிகள் ஆன்ட்ராய்டு 2.2 இயங்கு தளத்தில் இயங்குகின்றன. மேலும் இவை எப்சனின் எல்சிடி தொழில் நுட்பத்தையும் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த கண்ணாடிகள் 6 மணி நேர இயங்கு நேரத்தையும் கொண்டிருக்கின்றன.

மேலும் யுடியூப் வீடியோக்களை இந்த கண்ணாடிகளில் நேரடியாக பார்க்கலாம். இதில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்டு 32ஜிபி மெமரியை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த கண்ணாடிகள் டோல்பி மொபைல் சரவுண்ட் சவும், டச் ட்ராக் பேட் மற்றும் 3டி வசதிகள் போன்றவற்றையும் சப்போர்ட் செய்யும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X