EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
EPFO உறுப்பினர்களுக்கு ஒரு நம்ப முடியாத குட் நியூஸ் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின் படி, PF ஊழியர்களின் கணக்கில் EPFO சுமார் 40 ஆயிரம் ரூபாயை விரைவில் டெபாசிட் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரூ.40,000 தொகையை EPFO எப்படி வழங்கவுள்ளது என்றும், யாருடைய PF கணக்கிற்கெல்லாம் கொண்டு சேர்க்கவுள்ளது என்றும் தெளிவாக விளக்கியுள்ளது. சரி, இந்த தொகை யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்களிடம் PF கணக்கு இருக்கிறதா? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கானது
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பிஎஃப் (PF) கணக்கில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் தவறாமல் பிடிக்கப்படும் இந்த பிஎஃப் பணம் தான் உங்களுடைய PF அக்கௌன்ட் பேலன்ஸாக காட்சியளிக்கிறது. உங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகைகளுக்கான வட்டியை EPFO இப்போ வழங்கவுள்ளது.

PF கணக்கில் ரூ.40,000 டெபாசிட் செய்யவிருக்கும் EPFO
இதன்படி, விரைவில் ஒரு பெரிய தொகை உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும் என்று EPFO அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடமும் ஒரு PF கணக்கு இருக்கிறது என்றால், இந்த பதிவை இறுதி வரை படித்துப் பயன்பெறுங்கள். சரி, இப்போது EPFO அறிவித்த ரூ.40,000 டெபாசிட் விஷயத்திற்கு வருவோம்.

EPFO வெளியிட்ட நம்ப முடியாத அறிவிப்பு என்ன சொல்கிறது?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின் படி, விரைவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களின் கணக்கில் ரூ. 40,000 உறுதியாக டெபாசிட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 40,000 வைப்பு தொகை, PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களில் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதையும் EPFO தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. விபரங்களை முழுமையாக அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

யாருக்கெல்லாம் இந்த ரூ.40,000 கிடைக்கும்?
இதன் படி, ஊழியர்களின் PF கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வைப்பு நிதி வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உங்களுடைய PF கணக்கில் இருக்கும் பேலன்ஸ் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், இந்த ரூ.40,000 உங்களுக்கு வழங்கப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது. இந்த ரூ.40,000 தொகையை, சம்மந்தப்பட்ட PF ஊழியர் கணக்குகளில், EPFO விரைவில் டெபாசிட் செய்யுமென்று உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது?
இந்த ரூ.40 ஆயிரம் தொகை, உங்கள் 5 லட்சம் பேலன்ஸிற்கான வட்டியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலம் எளிதாகக் கண்டறியலாம். அதேபோல், PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள், அவர்களின் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தொகை இருக்கிறது என்பதையும் இந்த முறைப்படி செக் செய்து பார்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது இந்த ரூ. 40,000 உங்கள் PF கணக்கிற்கு மாற்றப்படும்?
சரி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சொன்ன இந்த தொகையை எப்போது எங்கள் கணக்கில் டெபாசிட் செய்யும் என்பது தானே உங்களுடைய அடுத்த கேள்வி. அதற்கான விடை இது தான், EPFO குறிப்பிட்ட தேதி என்று எந்தவொரு தகவலையும் இப்போதைக்கு வெளியிடவில்லை. ஆனால், இந்த தொகை மிக விரைவில் PF கணக்கில் வட்டி பணமாக மாற்றம் செய்யப்படும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறியுள்ளது. ரூ.40,000 தொகையை பெறக் கட்டாயம் ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்தபடியே PF கணக்கு பேலன்ஸை செக் செய்வது எப்படி?
சரி, இப்போது வீட்டில் இருந்தபடியே PF கணக்கு பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது என்று பார்க்கலாம்.
- உங்கள் PF கணக்கு இருப்பைச் சரிபார்க்க, முதலில் நீங்கள் epfindia.gov.in என்ற இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, 'Click here to know your EPF balance' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் epfoservices.in/epfo/ என்ற பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள்.
- இதற்குப் பிறகு நீங்கள் 'member balance information' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், உங்கள் PF கணக்கு எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும்.
- இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தின் EPFO அலுவலகத்தின் இணையதள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- எடுத்துக்காட்டாக, உங்கள் மாநில அலுவலகம் தமிழ்நாடு மற்றும் உள்ளூர் அலுவலகம் சென்னையாக இருந்தால், சென்னையை நகரமாகத் தேர்வு செய்யவேண்டும்.
- அதன் பிறகு நீங்கள் 'Submit' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இந்த முழு செயல்முறையும் முடிந்தவுடன், உங்கள் PF கணக்கு பேலன்ஸ் டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும்.
- இதேபோல், மிஸ்டு கால் மற்றும் SMS மூலமாகவும் உங்களுடைய PF கணக்கு பேலன்ஸை நாம் அறிந்துகொள்ள முடியும்.
- இதற்கு உங்களுடைய PF கணக்கு விபரம், உங்கள் மொபைல் போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அப்படி இணைக்கப்பட்டிருந்தால், 011-22901406 என்ற இந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உடனே பிஎப் தகவல் கிடைக்கும்.
- மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் பேலன்ஸ் தகவல் அனுப்பிவைக்கப்படும்

உங்கள் PF கணக்கு விபரத்தை பார்க்க இதை சரியாக செய்யுங்கள்



Click it and Unblock the Notifications