PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO-Employee Provident Fund Organization) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

யுனிவர்சல் கணக்கு எண் ஆன (UAN) உடன் ஆதாரை இணைக்க வேண்டுமா?
பிஃஎப் சந்தாதாரர்கள் தங்களின் யுனிவர்சல் கணக்கு எண் ஆன (UAN) உடன் அவர்களின் தனிப்பட்ட ஆதார் விபரங்களை இணைக்க வேண்டும் என்று பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. அனைத்து வகையான முக்கிய ஆவணங்களுடன் ஆதார் விபரங்களை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை முன்னிட்டு, இப்போது PF கணக்கிலும் இதை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பிஎப் சந்தாதாரர்கள் அனைவரின் கவனத்திற்கு.. இதை காலம் கடத்தாமல் உடனே செய்யுங்கள்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, பிஎப் சந்தாதாரர்கள் அனைவரும் அவர்களின் UAN எண் உடன் செயல்படக்கூடிய PF கணக்குடன் அவர்களின் தனிப்பட்ட ஆதார் விபரங்களைச் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இணைந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கணக்கில் வைப்பு வைக்கப்படும் தொகையில் சிக்கல் ஏற்படும்
குறிப்பிடப்பட்ட காலத்திற்கு இதைச் செய்யத் தவறும் பயனர்களின் கணக்கில் வைப்பு வைக்கப்படும் தொகையில் சிக்கல் ஏற்படும் என்று பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் பிஎஃப் பயனர்கள் தங்களின் UAN எண் கொண்ட கணக்குடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
ஆனால், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதற்கான கால அவகாசம் மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

PAN கார்டு உடன் ஆதார் இணைக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது
அதேபோல், PAN கார்டு பயனர்கள் தங்களின் பான் அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைத்துக்கொள்ள இறுதிக்கட்ட கால அவகாசமாக ஜூன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காரணமாக இதற்கும் தற்பொழுது செப்டம்பர் 1 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்காத பான் பயனர்களின் மீது ரூ. 1000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஃப் கணக்கில் உங்கள் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி?
பி.எஃப் கணக்கில் உங்கள் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி?
- பி.எஃப் கணக்கில் ஆதார் சேர்க்க, epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.
- பின்னர் ஆன்லைன் சேவைகளில் உள்ள E-KYC போர்ட்டலைக் கிளிக் செய்யுங்கள்.
- இப்போது கீழே காணப்படும் LINK UAN AADHAAR கிளிக் செய்யுங்கள்.
- இப்போது UAN எண், மொபைல் எண், ஆதார் எண் போன்ற முக்கிய எண்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
- பின்னர், UAN எண்ணை உள்ளிட்டு, பயன்பாட்டில் உள்ள உங்களின் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
- OTP உருவாக்கப்பட்டு உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
- மீண்டும், ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.
- இப்போது மீண்டும் ஒரு முறை OTP ஐ சரிபார்க்கவும்.
- OTP, ஆதார் எண் மற்றும் மொபைல் தொலைப்பேசி எண்ணை மூன்று முறை உள்ளிட்ட வேண்டும்.
- பின்னர் உங்கள் ஆதார் விபரங்கள் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுவிடும்.

UAN எண், மொபைல் எண், ஆதார் எண் கட்டாயம் தேவை

ஆதார் விபரங்கள் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்படும்

இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா தொற்றினால் நாடு அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிறகு, மக்கள் ஏராளமானோர் தங்களின் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். இதற்கு அரசாங்கம் அனுமதி வாங்கியிருந்தாலும் கூட, பிஎஃப் பணத்தை மக்கள் அவசரப்பட்டு வெளியில் எடுத்து செலவு செய்ய வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காரணம், பிஎஃப் சேமிப்பு நீண்ட கால அடிப்படையில் அதிக ரிட்டன் தரக்கூடியது. மக்கள் இதை இப்போதே பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications