விலங்குகள் கடத்தலுக்கு உதவும் பேஸ்புக்: மறுபடியும் மாட்டிய மார்க்.!
மேலும் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளர்களுக்கு பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து கொண்டே தான் இருக்கிறது.
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தபோதிலும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பலரும் தற்சமயம் பாதுகாப்பான முறையில் தான் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அதிக புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்திவிட்டனர் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் அழியும் நிலையில் உள்ள சில விலங்குகளை பேஸ்புக் மூலம் விற்பனை செய்யப்படுவது அண்மையில் அம்பலமாகி உள்ளது. மேலும் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளர்களுக்கு பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து கொண்டே தான் இருக்கிறது. இருந்தபோதிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பேஸ்புக் மீது வந்தகொண்டே தான் இருக்கிறது.

டிராபிக்
உலக காட்டுயிர் கடத்தலை கண்காணிக்கும் 'டிராபிக்" என்ற அமைப்பு தாய்லாந்தில் நடத்திய விசாரணையில் இந்த அழியும் நிலையில் உள்ள சில விலங்குகளை பேஸ்புக் மூலம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக விற்பனை
குறிப்பாக பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர் அனுமதித்தால் மட்டுமே, வெளிநபர் பங்கும் பெறும் குழு வசதி இவற்றில் உள்ளது. இதை பயன்படுத்தி தான் உலகெங்கிலுமுள்ள 2லட்சத்திற்கும் மேற்பட்டோர், அழியும் ஆபத்தில் உள்ள விலங்குகளை உயிருடன் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து வருகின்றனர் என டிராபிக் அமைப்பு கண்டறிந்து உள்ளது.

கடத்தல் கும்பல்கள்
பின்பு தாய்லாந்தை பொருத்தவரை அந்நாட்டின் வனப் பகுதிகளில் உள்ள அருகிவரும் விலங்குகளையும், பிற நாட்டின் அரிய
விலங்குகளையும், பிற நாட்டின் அரிய விலங்குகளையும் பேஸ்புக் மூலம் அநியாயமாக கடத்தல் கும்பல்கள் விற்பனை செய்து
வருகின்றன.

கொடூர வியாபாரம்
மேலும் தடை செய்யப்பட்ட விலங்குகளை விற்பதற்கு தமது தளம் அனுமதிப்பதில்லை என பேஸ்புக் அதிகாரிகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்., இருந்தபோதிலும், கடத்தல் பேர்வழிகளையும்,விலங்குகளை வாங்கும் வெறியர்களையும் பேஸ்புக் எளிதில்
இணைத்து விடுவதால், இந்த கொடூர வியாபாரம் வேகமாக வளர்ந்து கொண்டே தான் வருகிறது.


Click it and Unblock the Notifications