தயவு செய்து இதை நிறுத்துங்கள்: சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய ஊழியர்கள்.! என்ன காரணம்?
புதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

அதேபோல் கூகுள் நிறுவனம் மக்களுக்கு பாதுகாப்பான ஆப் வசதிகளை வழங்க அதிக முயற்சி செய்கிறது. அதாவது நமது தகவல்களை திருடும் ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது இந்நிறுவனம். அண்மையில் இந்நிறுவனம் பாதுகாப்பற்ற அல்லது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை அதிகமாக நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.

500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
அது என்னவென்றால், பணியிடங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மடலை எழுதிய ஊழியர்கள் அனைவரும் கூகுளின் ஆல்பாபெட்டில் பணியாற்றி வருபவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த ஊழியர்கள் தெரிவித்தது என்னவென்றால், அலுவலகத்தில் பாதுகாப்பு என்பது குறைவாக தான் இருக்கிறது. பின்பு பாலியல் ரீதியிலான வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும், மேல் அதிகாரிகளிடம் எவ்வளவு முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு குழுவை நிர்வகிப்பது மற்றும் லீடாக இருந்து செயல்படுத்துவது போன்ற பணிகளை பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களும், அது சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பாதிக்கப்பட்டவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு அருகில் அமர வைப்பது மற்றும் பிரத்யேக அலுவல் சார்ந்த சந்திப்பு கூட்டத்தை உருவாக்குவது போன்ற போக்குகள் இருப்பதாக பாதிகப்பட்ட ஒரு ஊழியர் தகவல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications