இனிமேல் இப்படித்தான்.! கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய முக்கியத் தகவல்.!
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலையால் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதுவும் மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா கட்டுப்பாடாக டாஸ்மார்க் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலைமுதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவேஉள்ளது.

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள்,இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில்பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள்மக்களை எச்சரித்து வருகின்றனர்.

20 சதவிகிதம் ஊழியர்கள்
இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் தங்களது அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் 20 சதவிகிதம் ஊழியர்கள்
தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக கூகுள் பணியாளர்களுக்கு சுந்தர் பிச்சை அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், 60 சதவிகிதம் பணியாளர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். பின்பு ஏஞ்சிய 2 நாட்கள் தங்கள் விருப்பம் போல் அவர்கள் பணியாற்றலாம். இவர்களை தவிர 20 சதவிகிதம் பணியாளர்கள் தங்களது பணியிடங்களை கூகுளின் வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 ஆயிரம் ஊழியர்கள்
மேலும் வரும் செப்டம்பர் வரை கூகுளின் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் உக்கிர தாண்டம் ஆடி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.மேலும் இந்த கொரோனா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகின்றன.


Click it and Unblock the Notifications