டோங்கோ தீவு: சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்.! எப்படி தெரியுமா?
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு பல நாடுகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக அங்கு தொலைத்தொடர்பு மற்றும் இணை சேவை முழுவதுமாக முடங்கி போயுள்ளது. இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அங்கு இணைய சேவை வழங்க முன்வந்துள்ளார் எலான் மஸ்க்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் ஒன்றான டோங்கா தீவில் எரிமலைகள் பிரமாண்டமாக வெடித்து சிதறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவியது. குறிப்பாக இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இந்த இயற்கை பேரழிவினால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அங்கு பல பகுதிகள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. மேலும் அங்கு விமான நிலைய ஓடுபாதை சாம்பலால் மூடி இருந்தது. பின்பு அதை இப்போதுதான் அகற்றி உள்ளனர். இதை தொடர்ந்து அந்த நாட்டுக்கு பல நாடுகள் நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளன.

அதேபோல் டோங்கோ தீவின் தலைநகரில் இருந்து சுமார் 64 கிமீ தொலைவில் இந்த எரிமலை காணப்படுவதால் டோங்கோநாட்டிற்கு இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியது. எரிமலை வெடித்து சிதறியதன் மூலம் ஏற்பட்ட அதிர்வு பல கிமீ தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எரிமலை வெடிப்புக்கு பின்பு டோங்கோ எவ்வளவு உக்கிரமாக பாதிக்கப்பட்டுள்ளது என சில செயற்கைகோள் படங்கள் மூலம்
தெரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் அந்த நாட்டின் தலைநகரமான நுகுஅலோஃபா அடர்த்தியான பழுப்பு சாம்பலால் சூழ்ந்துள்ளது
தெளிவாகத் தெரிகிறது.

குறிப்பாக அந்த நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் உலகின்
மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் அவர்கள், தனக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் அங்கு இணைய சேவை வழங்க முன்வந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார்லிங் திட்டத்தின் மூலம் இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டுமானால்டோங்கோ மக்கள் எங்களிடம் தெரிவிக்கலாம் என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் எரிமலையால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவுகளில் தொலைத்தொடர்பு சேவையை மீணடும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் இணைய சேவையை தொடங்க குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தான் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications