அட நாசா இவ்வளவு சிரமப்பட்டு எடுத்த புகைப்படத்தை இப்படியா கலாய்ப்பது Elon Musk.!
அமெரிக்காவின் நாசா நிறுவனம் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் தற்போது விண்வெளி புகைப்படங்களை அதிகமாக பகிர்வது இந்த நாசா அமைப்பு தான்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி அன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில்
இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.

அதாவது இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த அதிநவீனஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கு இது?
குறிப்பாக பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்களை குறித்து ஆய்வு செய்வதற்கு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா நிறுவனம் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே நாசா உருவாக்கிய ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
அதாவது 1990ல் நாசா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கியில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசாஉருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க கண்ணாடி உள்ளது
அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்க கண்ணாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்அகலம் 21.32 அடி. மேலும் பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக செயல்படுகிறது.

முதல் புகைப்படம்
குறிப்பாக 6.2 டன் கொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட இயங்கக்கூடியது. மேலும் கடந்த ஜனவரி மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியில் இருந்து சுமார் 10 லட்சம் மைல்கள் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. .
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட துல்லியமான முதல் வண்ண புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.

துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளது
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடைபெறும் நிகழ்வை இந்த அதிநவீன தொலைநோக்கி துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளது.
பின்பு உலகம் முழுவதும் இந்த புகைப்படங்கள் குறித்து பல்வேறு வானியல் வல்லுனர்கள்மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எலான் மஸ்க்
இந்நிலையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், நாசாவின் முதல் வண்ணப் புகைப்படத்தை பங்கமாய் கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமையல் அறையில் இருக்கும் மார்பில் கல்
எலான் மஸ்க் பதிவில் இருக்கும் புகைப்படத்தில், சமையல் அறையில் இருக்கும் மார்பில் கல்லை ஜூம் செய்து பார்த்தால் நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படம் போல் இருப்பதாகவும், சிறப்பான முயற்சி நாசா எனவும் எழுதப்பட்டுள்ளது.
குறிப்பாக நாசாவை கலாய்த்து பதிவிட்டுள்ள எலான் மஸ்கின் டிவீட் தற்போதுஇணையத்தில் வைரலாக பரவியுள்ளது.

நட்சத்திரங்கள்
பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள்தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். பின்பு அந்தநட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். எனவே இப்படி தான் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நட்சத்திரங்களை குறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய போகிறது.

மேலும் கடந்த சில தினங்களாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் டூடுல் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications