மின்சார கட்டணம் குறையும்: வருகிறது ப்ரீபெய்ட் மீட்டர்: முழுத் தவகவல்கள் இதோ.!
வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் உத்திர பிரதேச மாநிலத்தில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ அம்மாநில எரிசக்தி அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.இது குறித்த முழுத் தவகவல்களையும் விரிவாக பார்ப்போம்.

ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள்
அதன்படி அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மக்கள் பிரிதிநிதிகளின் வீடுகளில் இருநது இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும் பணி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும்என்ற நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள்
மேலும் இதுகுறித்து எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்தது, என்னவென்றால், மின்சார மசோதாவை தாக்கல் செய்தபோது, தற்போது வசூளிக்கப்படும் மின்சார கட்டணம் சரியானது அல்ல என அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

எனவே இதை மனதில் கொண்டு மக்களின் அரசு வீடுகளில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை முதலில் நிறுவ ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன என ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் தெரிவித்தார்.

ரசீது வரிசையின் படி நிறுவப்படும்
இதன் முதற்கட்டமாக ஒரு லட்சம் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டருக்கான ஆர்டர்கள் வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட அவர், இந்த மீட்டர்கள் ரசீது வரிசையின் படி நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பின்பு இது தவிர இதுபோன்ற புகழ்பெற்ற நபர்கள் அனைவருக்கும் இந்த ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை பெறுமாறு முறையீடு செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆயிரம் கோடி
குறிப்பாக உத்தரபிரதேசத்தில்,அரசு துறைகள் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது என்றும், அதன் மீட்புக்காக மாநில அரசு தவணை முறையில் கட்டணத்தை செலுத்தி விருப்ப வகை வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications