அவ்வளவு பாசம் அது மேலே: தெரிந்தே மொபைல்போனை விழுங்கிய இளைஞர்: அப்புறம் என்ன ஆச்சு!
மொபைல் சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக பல்வேறு முக்கிய தகவல்களை இந்த மொபைல் சாதனங்கள் மூலம் எளிமையாக தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில் கடுமையான வயிற்று வலி காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து ஒரு மொபைல்போன் எடுக்கப்பட்ட சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவந்த தகவலின்படி, அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன்செய்து பார்த்த போது அவரின் வயிற்றில் ஒரு மொபைல்போன் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின்பு மருத்துவர்கள் இந்த விஷயத்தை வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நபரிடம் கூறிய போது அவர் எந்த வித அதிர்ச்சி அடையாமல் இருந்துள்ளார். அதாவது அந்த இளைஞர் தெரிந்தே இந்த மொபைல்போனை விழுங்கியுள்ளார். சில நாட்களில் இந்த மொபைல்போன் தானகவே வெளியே வந்து விடும் என நினைத்து அப்படியே விட்டுள்ளார்.

குறிப்பாக இவர் மொபைல்போன் விழுங்கி பல மாதங்கள் ஆகியும் வெளிவரவில்லை, அதாவது அவருக்கு வயிற்று வலிதான் வந்தது. அதன்பின்பு பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள மொபைல் போனைதனியாக எடுத்து அவரை காப்பற்றியுள்ளனர்.

மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறியது என்னவென்றால், மொபைல்போனை விழுங்கிய நபர் இயற்கையாகவே அதுவந்துவிடும் என்று நினைத்துள்ளார், ஆனால் வரவில்லை. அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட பிறகே எங்களின்மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

குறிப்பாக ஆறு மாத காலம் மொபைல் போன் அவர் வயிற்றில் இருந்ததால் குடலில் அதிகளவில் தொற்றுக்கள்ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு இதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு தற்போதுஅந்த நபர் நலமாக உள்ளார்.

அதேபோல் பாதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றில் இருந்த செல்போன் அவர் சாப்பிடும் உணவை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாளடைவில் வயிற்றில் தொற்று ஏற்பட காரணமாக அமைந்தது. ஒருவேளை அவர் மொபைல் விழுங்கிய உடனேயே மருத்துவ சிகிச்கை எடுத்து கொண்டிருந்தால் இவ்வளவு அவஸ்தைகளை சந்தித்திருக்கமாட்டர் எனக் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

அதேபோல் மொபைல் சாதனங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்யக் கூடாது. பின்பு சார்ஜ் செய்து கொண்டே போன் பேசாக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் செல்போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது, இதனால் பிரச்சனை வரும். எனவே அந்தந்த செல்போனுக்குதகுந்த சார்ஜர் மட்டும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.மேலும் செல்போனை உங்கள் தலையணையின் கீழ் வைக்க கூடாது, அது மிகவும் ஆபத்து. பின்பு நீங்கள் வாங்கும் போனுக்கு ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துவது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications