ஆராய்ச்சி மையம் அமைக்கும் இபே: புதிய திட்டம்!

By Super
|
ஆராய்ச்சி மையம் அமைக்கும் இபே: புதிய திட்டம்!

மக்களுக்கு மிக பரிட்சையமான இபே ஆன்லைன் வலைத்தளம் பெங்களூரில் புதிய ஆராய்ச்சி மேம்பாட்டு கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மக்களுக்கு நம்பகமான சேவையை வழங்கி வருகிறது இபே நிறுவனம். ஏற்கனவே சென்னை மற்றும் மும்பையில் 2,200 உழியர்களை கொண்டிருக்கிறது இபே நிறுவனம். இது அல்லாமல் இப்போது புதிதாக பெங்களூரிலும், சோதனை மேம்பாட்டு கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளது இபே நிறுவனம்.

இதன் துணை நிறுவனமான பேபால் பற்றியும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறந்த வளர்ச்சியை அடைய, இன்னும் பல முன்னேற்றங்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் பேபால் நிறுவனத்தின் உயர் அதிகாரியான அனுப்பம் பகூஜா தெரிவித்துள்ளார்.

சிறந்த தொழில் நுட்ப வள்ளுனர்கள் மூலம் தொழில் நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை வழங்க இருக்கிறது பேபால். கிட்டத்தட்ட இந்த இரண்டு ஆன்லைன் நிறுவனத்தினையும் ஒரு மார்கெட் பிளேஸ் என்றே சொல்லலாம்.

பெங்களூரில் இபே நிறுவனத்தின் இந்த ஆராய்ச்சி கூடத்தினை அமைப்பதன் மூலம், நிறுவனத்திற்கு கூடுதல் வளர்ச்சி கிடைக்கும். வளர்ச்சிகளை மேம்படுத்துவதனால் வாடிக்கையாளர்களின் நம்பகமும் இன்னும் அதிகமாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X