எலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள் நிறுவ அனுமதி.! ஒவ்வொரு 25 கி.மீ. தொலைவில்....
குறிப்பாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலைகளிலும் எலக்ட்ரானிக் சிட்டி முதல் அத்திப்பள்ளி வரை 6 எலக்ட்ரிக் சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் கண்டிப்பாக அனைவரும் பயன்படும் வகையில் தான் இருக்கிறது, அதன்படி பெங்களூரு பெருநகர சாலைகளில் 83 சார்ஜ் மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 24சாரஜ் மையங்கள்
நிறுவ அனுமதி தற்சமயம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக மின் சக்தியில் இயங்கும் எல்க்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்கள் 25 கி.மீ இடைவெளியில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் காரை
மேலும் எலக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்றரை மணிநேரம் ஆகும். அதன்படி முழுமையாக சார்ஜ் செய்த காரில் 120 கீ.மீ வரை பயணிக்கலாம். டிசி (dc) சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய 30-45 நமிடங்களும் ஏசி(ac) சார்ஜ் மூலம் சார்ஜ் செய்ய 5-6 மணி நேரமும் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 எலக்ட்ரிக் வாகனங்கள்
பின்பு 10,000 எலக்ட்ரிக் வாகனங்கள் பெங்களூரில் இயங்கி வருகின்றன,இதனை கருத்தில் கொண்டு தான் அரசு தரப்பில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் மையங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

83 சார்ஜ் மையங்கள்
இதற்கான அனுமதி கோரி தான் மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது, எனவே பெங்களூரு பெருநகர சாலைகளில் 83 சார்ஜ் மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 24சாரஜ் மையங்கள்
உட்பட மொத்தம் 107 சார்ஜ் மையங்கள் அமையும் என தகவல் வெளிவந்துள்ளது.

பெங்களூரு - சென்னை
குறிப்பாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலைகளிலும் எலக்ட்ரானிக் சிட்டி முதல் அத்திப்பள்ளி வரை 6 எலக்ட்ரிக்
சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மையங்களை அமைக்க ஏற்ற இடங்களை
தேர்வு செய்யும் பணியை கர்நாடக அரசு நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துடன் இணைந்து செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications