தமிழகத்தில் இ-பாஸ், இ-பதிவு நடைமுறை ரத்து.! புதிய தளர்வுகள் அறிவிப்பு.!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன. குறிப்பாக தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது. எனவே தற்போது தொற்று பரவலும், உயிரிழப்பும்குறைவாகவே உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே பொதுமக்கள் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களை குறைக்க முடியாது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியா முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. பின்பு நாளொன்றுக்கு 4 லட்சம் என்ற அளவில் இருந்த கொரோனா தொற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் 5-ம் தேதி காலை 6-மணிக்கு நிறைவடைகிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நேற்று அனைத்து துறை செயலர்களுடன்,முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 12-ம் தேதி காலை 6-மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நேற்று இரவு அறிவித்தார். பின்பு சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அறிவித்தார். அந்த அறிவிப்பில் மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பாஸ் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் ஏசி வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில்,
பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். பின்பு அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ்,இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் 50 பேர், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்ற அனுமதிக்கப்படுவர். இதுதவிர பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications