இ-சிகரெட் நல்லதா, கெட்டதா.? தேசிய அளவிலான முதல் ஆய்வின் முடிவு இதோ.!
சிகரெட்டுகளை கைவிடுவதற்கான தினசரி நிகழ்தகவுடன் ஒப்பிடும்போது மின் சிகரெட் நுகர்வோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிப்பதைத் தடுக்க மின் சிகரெட்டுகள் (இ-சிகரெட்கள்) உதவக்கூடும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-சிகரெட்களும் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்று முன்னர் வெளியான தகவல்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் சிகரெட்டுகளை கைவிடுவதற்கான தினசரி நிகழ்தகவுடன் ஒப்பிடும்போது மின் சிகரெட் நுகர்வோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புகைபிடிப்பதை தவிர்க்க விரும்புவோர்களின் ஆசைகள் மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் காரணிகளாய் கருதப்பப்டும் கல்வி சார்ந்த முயற்சி, உடல்நலக் காப்பீடும் மற்றும் வயது போன்ற விடயங்கள் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில், இ-சிகரெட் பயனாளர்களிடையே புகைப்பழக்கத்தை இடைநிறுத்துதலின் கீழ் உள்ள வடிவங்களை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முதல் ஆய்வு இதுவாகும்.
மெயில்மென் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் (Mailman School of Public Health) தலைமை ஆசிரியரான டேனியல் கியெவெங்கோ கூறுகையில், இந்த ஆய்வின் கீழ் சிகரெட்டுகளுக்கு சிறந்த மாற்றாக மின் சிகரெட் பயன்பாடு இருக்கும் மற்றும் சிகரெட் தடுப்பு நடவடிக்கையில் இது முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று நம்புகிறார். இந்த ஆய்விற்கு 2014 மற்றும் 2015 தேசிய சுகாதார நேர்காணல் சர்வே தரவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்-சிகரெட் பயன்பாட்டிற்கான பயனர் அனுபவங்கள் மற்றும் நோக்கங்கள், இடைப்பட்ட மின் சிகரெட் பயனர்கள் மத்தியில் குறைவான புகைப்பழக்க இடைநிறுத்த விகிதங்கள் போன்ற விவரங்களில் பெரிய அளவிலான தெளிவு இல்லை என்று ரூட்ஜர்ஸ் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்-ன் (Rutgers School of Public Health) கிறிஸ்டீன் டெலானேவ் - ஆய்வுக் கட்டுரையின் இரண்டாவது எழுத்தாளர் தெரிவித்துளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








