சே.. கரடி மேல இருந்த பயமே போச்சிப்பா..!
சொல்லப்போனால் கருப்பு கரடிகள் பார்க்க தான் படுபயங்கரமாக இருக்குமாம். ஆனால், உள்ளுக்குள் 'பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட் வீக்கு' என்பது போல கொஞ்சம் பயந்தாங்கோளி தானாம்..! வேட்டை விலங்கான கரடி, எதை பார்த்து பயந்து ஓடுகிறது என்பதை சொன்னால், கரடி மேல் உங்களுக்கு இருக்கும் மரியாதையே போய்விடும்..!

கரடிகளை கதி கலங்க வைக்கும்படி செய்தது, அதை விட பெரிய விலங்கோ அல்லது வேட்டை ஆயுதமோ இல்லை. அந்த வேலையை பார்த்தது - பறக்கும் ட்ரோன்கள்.
கடலுக்கு அடியில் வேற்று கிரகவாசிகள்..!

அட நிஜம் தான், எப்போதெல்லாம் பறக்கும் ட்ரோன்களை கரடிகள் பார்க்கிறதோ, அப்போதெல்லாம் 'அரக்க பறக்க' கரடிகள் அச்சம் கொள்கிறதாம்..!

சொல்லப்போனால், அதன் இதய துடிப்பு சுமார் 400 மடங்கு வரை அதிகரிக்கிறதாம். இதய துடிப்பை அளக்க உதவும் ஹார்ட் மானிடரிங் கருவிகளையும், ஜிபிஎஸ் (GPS) கருவிகளையும் கரடியின் உடலோடு இணைத்து, அவைகளின் தலைக்கு மேல் டரோன்கள் பறக்க விடப்பட்ட போது அவைகளின் இதய துடிப்பு அதிகமானதாம். இது நிச்சயம் பயத்தின் மூலம் தான் ஏற்படுகிறது என்பது மட்டும் உறுதியாம்.
மிதி மிதினு மிதிச்சா... போன் சார்ஜ் ஏறும்..!

4 கரடிகளை கொண்டு மொத்தம் 18 ட்ரோன்களை பறக்க விட்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரோன்கள் மிருகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்கட்டாக கருதப்பட்டாலும், மிருக வேட்டைகளை தடுக்கவும் வன பாதுகாப்புகாகவும் தான் ட்ரோன்கள் பெரும்பாலும் காடுகளில் பயன் படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!


Click it and Unblock the Notifications