'குறுக்க நெடுக்க' பறந்ததற்காக 19 லட்சம் டாலர்கள் அபராதம்..!
அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமான ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் (Federal Aviation Administration) ஒப்புதல் இன்றி வானில் பறந்ததாக குற்றம் சுமற்றப்பட்ட ஸ்கைபேன் (Skypan) ட்ரோன் நிறுவனத்திற்கு 1.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2012 முதல் டிசம்பர் 2014 வரையிலாக மொத்தம் 65 ட்ரோன்கள் ஒப்புதல் இன்றி பறக்க விட்டதாக ஸ்கைபேன் நிறுவனம் மீது குற்றம் சுமற்றப்பட்டுள்ளது என்பதும், இதுவரை அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இவ்வளவு பெரிய அபராத தொகையை இதற்கு முன் விதித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களின் மேல் பிற விமானங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஸ்கைபேன் நிறுவனத்தால் பறக்க விடப்பட்ட ட்ரோன்கள் அத்துணையும் ஏரியல் புகைப்படங்கள் (aerial imagery) எடுப்பதற்காக பறக்கவிடபட்டவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி மீடியா கம்பெனிகள், அமெரிக்காவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ட்ரோன்கள் என மொத்தம் 1400-க்கும் ட்ரோன் சார்ந்த பிரச்சனைகளை அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் கையாள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
அசத்தல் : ஆகாய வித்தைகள் நிகழ்த்தும் உலகின் 'குட்டி' ட்ரோன்..!
200 அடி உயர காற்றாலை மேலே 'சன் பாத்' - சிக்கியது வீடியோ..!
நிமிடத்தில் 'பறந்து' வரும் சூப்பர் ஆம்புலன்ஸ்..!
அசத்தல் : இந்தியாவின் புதிய 'அல்ட்ரா-டெக்' உளவாளி..!


Click it and Unblock the Notifications