பாகிஸ்தான் சீனாவை நடுங்க வைத்த ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை.!
மேலும், வான்வெளியிலும் நுழைந்து இந்தியாவை வேவு பார்த்து வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பை இந்தியா மேம்படுத்த வேண்டிய நிலையில் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து போர் விமானம், போர் தொழில்நுட்ப கருவ
இந்திய எல்லையில் அத்துமீறி சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் அத்துமீறி வருகின்றன. மேலும், இந்திய எலைக்குள் நுழைந்தும் தனது ராணுவத்தை வைத்து இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன.
மேலும், வான்வெளியிலும் நுழைந்து இந்தியாவை வேவு பார்த்து வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பை இந்தியா மேம்படுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

வெளிநாடுகளில் இருந்து போர் விமானம், போர் தொழில்நுட்ப கருவிகளும் வாங்கி குவித்து வருகின்றது. இந்த போதிலும், சீனாவுக்கு இணையாக தனது உள்நாட்டு தயாரிப்பில் ஏவுகணைகேளை சோதனை நடத்தியும் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகின்றது.

எல்லையில் அத்துமீறும் சீனா:
இந்தியா எல்லைப்பகுதியில் அவ்வப்போது, சீனா ராணுவம் உட் புகுந்து வருகின்றது. மேலும் இந்தியாவில் ஒரு சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. தனது படையை காட்டி எல்லையில் அத்துமீறி வருகின்றது. இந்தியா எல்லையில் உள் வரை சீனா ராணுவம் ஒரு பகுதியில் தார் சாலை அமைந்துள்ளது.

அதி நவீன ஆயுதங்கள்:
சீனா தனது படையில் அதி நவீன படை ஆயுதங்களையும் டேங்குகளையும் வைத்துள்ளது. மேலும் சீனா முதல் பாகிஸ்தான் வரை சாலை அமைத்துள்ளது. தனது படையில் உள்ள அணு ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கும் வழங்கி வருகின்றது சீனா.

சீனா, பாகிஸ்தானிடம் டிரோன்கள்:
பாகிஸ்தானுக்கு சீனா தன்னிடம் உள்ள அதிநவீன 48 டிரோன்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் எதிரி நாடுகளையும் வேவு பார்க்க முடியும். மேலும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்த முடியும். ரேடார்களுக்கு சிக்காமலும் செல்ல முடியும் வகையில் பாகிஸ்தானுக்கு டிரோன்களை வடிவமைத்து கொடுத்துள்ளது சீனா.

ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை வெற்றி:
தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை தாக்கும், ஆகாஷ் 1எஸ் என்ற ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாறுபட்ட தொழில்நுட்ப முறைகளும் நாட்டை காக்கவும் வகையில் இந்தியா செயல்பாட்டு வருகின்றது.

விமானத்தை தாக்கும்:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்து ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வரும் இந்த ஏவுகணைகள், தரைமட்டத்தில் இருந்து 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்தை கூட தாக்கும் வல்லமை கொண்டவை.

இலக்கை துல்லியமாக அழிக்கும்:
30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை கூட ஏவுகணை தாக்கி அழிக்கும். எதிரி நாட்டு ஏவுகணைகளையும் எதிர்கொண்டு முறியடிக்கும் வல்லமை கொண்ட ஆகாஷ் 1எஸ் ஏவுகணை மேம்படுத்த நிலையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் 2 வது முறையாக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு நடுக்கம்:
இந்தியாவின் இந்த ஏவுகணை சோதனை வெற்றியால் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நடுங்கின்றன. இந்திய எல்லைக்குள் ஊருவிடுவினாலும், இந்தியா ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை மூலம் இலக்குகளை துல்லியமாக அழித்து விடும்.


Click it and Unblock the Notifications