தூர்தர்ஷன் அறிவித்துள்ள புதிய அட்டகசமான பரிசுத்தொகை.!
தூர்தர்ஷன் புதிய லோகோவை உருவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பொது நிறுவனமான தூர்தர்ஷன் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மேலும் பசுமையான அனுபவத்தை தரக்கூடிய தூர்தர்ஷன் சேனல்களின் லோகோ மாற்றப்படுகிறது. இதற்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பொது நிறுவனமான பிரசார் பாரதி. இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
தற்போது உள்ள தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது அந்நிறுவனம், இதற்க்கு குறிப்பிட்ட பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூர்தர்ஷன்:
1980 மற்றும் 1990 ஆண்டுகளில் மிகவும் அருமையான நிகழ்ச்சியை வழங்கியது இந்த தூர்தர்ஷன் சேனல்கள், மேலும் பசுமையான நாடகங்கள், பாடல் மற்றும் திரைப்படம், பொது நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தையும் ஒளிபரப்பு செய்தது இந்த தூர்தர்ஷன் சேனல்கள்.

புதிய லோகோ:
அனைத்து மக்களையும் மறுபடியும் தூர்தர்ஷனோடு இணைக்கும் முயற்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, மேலும் அதற்க்கு தகுந்த புதிய லோகோ மாற்றப்படுகிறது என பிரசார் பாரதியின் தலைமை நிர்வாகி அதிகாரி சசி எஸ். வேம்பட்டி தகவல் தெரிவித்தார்.

பரிசுதொகை:
இந்த தூர்தர்ஷன் புதிய லோகோவை உருவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் எனத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள்:
இந்த போட்டியில் இந்திய குடிமக்கள் அனைவரும் பங்கேற்க்கலாம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியார்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க்க முடியும்.

கடைசி நாள்:
இந்தப்போட்டில் பங்கேற்க்க விரும்புபவர்கள் http://www.mygov..in என்ற வலைதளத்திற்க்கு சென்று சுய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்அதன்பின் குறிப்பிட்ட அளவில் லோகோவை வடிவமைக்க வேண்டும், பின்பு லோகோவை பதிவேற்ற கடைசி நாள் 14-08-2017.


Click it and Unblock the Notifications