அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்னு சும்மாவா சொன்னாங்க, இந்த காலத்துல எல்லாமே இயந்திரமாகிவிட்ட நிலையில் மனுஷன் கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பது மிகவும் சவாலான காரியமாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.
ஃப்ளிப்கார்ட் ஆபீஸ் - ஒரு குட்டி சொர்கம் (புகைப்படங்கள்)..!
மனசு அமைதியாக இருந்தால் எல்லா வேலைகளிலும் கவனம் சிதையாமல் பார்த்து கொள்ளலாம். இவை எல்லாம் தெரிந்திருந்தும் நம்மாளுங்க ஸ்மார்ட்போன் பயன்படுத்த தான் செய்கின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்றாலும் அவைகளுக்கு அடிமையாகும் போது தான் பிரச்சனை துவங்குகின்றது.
என்னென்ன பிரச்சனை என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்த்து, மொபைல் போன் பயன்பாட்டை முடிந்த வரை குறைத்து கொள்ளுங்கள், இவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் இவை உங்களை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள்..
கை
அதிகமாக ஸ்மார்ட்போன் திரையை பயன்படுத்தும் போது விரல் நுனிகளில் அதிக பாரம் ஏற்பட்டு பாதிப்புகள் துவங்கும்.
முதுகு வலி
கழுத்து குனிந்த நிலையில் குறுந்தகவல்களை அனுப்புவதால் சீக்கிரமாகவே முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் வலி் ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தலைவலி
எந்நேரமும் கண்களுக்கு வேலை கொடுப்பதால் தலை வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நீல நிறம்
நீலம நிற விளக்கு கண்களில் பட்டால் தூக்கமின்மை ஏற்படும் நிலையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் பிரச்சனை அதிகம் தான். சரியான தூக்கமில்லை எனில் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு எதிலும் கவனம் செலுத்த முடியாது.
மன அழுத்தம்
அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது மன அழுத்தத்திற்கு காரணமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள், மேலும் இந்நிலை தொடர்ந்தால் நோமோஃபோபியா ஏற்படவும் செய்யும்.
விபத்து
சாலைகளில் பயனம் செய்யும் போது கவனம் ரோட்டில் தான் இருக்க வேண்டும், மொபைல் போன் பயன்படுத்தும் போது விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அழுக்கு
உங்களது மொபைல் போன் கழிவரையை விட அதிக அழுக்கானது, இதன் மூலம் பல நோய்கள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குழந்தை
வயிற்றில் இருக்கும் குழந்தை சிசுவிற்கு மொபைல் போன் சிக்னல்கள் ஆபத்தாக இருக்கும் என்கிறனர் மருத்துவர்கள்