அரசு ஆவணங்களை பாதுகாக்கும் டிஜிலாக்கர்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய திட்டத்தின் மூலம் இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது தகவல்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்க முடியும். 'டிஜிலாக்கர்' என்ற புதிய திட்டம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ட்ராப் பாக்ஸ் மற்றும் எவர்நோட் போன்ற சேவை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'தல' அஜித் குமாரின் இன்னொரு அவதாரம்..!

மற்ற ஆன்லைன் லாக்கர்களை போன்றே டிஜிலாக்கரும் பயனாளிகளின் தகவல்களை பாதுகாப்பாக வைக்க உதவுகின்றது. இந்த சேவையானது மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படுத்தப்பட இருக்கின்றது. தற்சமயம் சோதனை முறையில் இயக்கப்படும் இந்த சேவையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் 1 ஆம் தேதி துவங்கி வைக்கிறார்.
வாட்ஸ்ஆப் செயலியில் இதெல்லாம் இருந்தால்..?!

இப்போதைக்கு டக்கரன தொழில்நுட்ப நிறுவனங்கள் இவை தான்..!
இந்த சேவை பயனாளிகளின் பேன் கார்டு முதல் அனைத்து வித அரசு தகவல்களையும் ஆன்லைனில் பாதுகாக்க வழி செய்கின்றது. இந்திய குடிமகன்களுக்கு துவக்கத்தில் அதிகபட்சமாக சுமார் 10 எம்பி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும், பின் அவர்கள் தங்களது ஆதார் எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் குறிப்பிட்ட பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு முறை கடவு சொல் (OTP) அனுப்பப்படும், இதை செய்து முடித்த பின் வாடிக்கையாளர்கள் கடவு சொல்லை மாற்றி கொள்ள முடியும் என்பதோடு கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற சேவையோடு இணைத்து கொள்ளலாம்.

இந்த சேவை ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகள், பிடிஎஃப் மற்றும் அரசு தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து கோப்புகளையும் பதிவேற்றம் செய்ய வழி வகுக்கின்றது.


Click it and Unblock the Notifications