நிபந்தனையுடன் இந்திய விற்பனைக்கு அனுமதி பெற்றது சியோமி நிறுவனம்
குவால்காம் சிப்செட் பயன்படுத்தும் சியோமி மொபைல்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு இந்தியாவில் அனுமதி அளத்தது தில்லி உயர்நீதிமன்றம்.
[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்]
எரிக்ஸன் நிறுவனம் துவங்கிய வழக்கில் சியோமி மொபைல்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது மேலும் சுங்க அதிகாரிகளுக்கும் அதற்கான ஆனை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குவால்காம் சிப்செட் பயன்படுத்தும் சியோமி போன்களை விற்பனையை ஜனவரி 8 ஆம் தேதி மேற்கொள்ளலாம் என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய பிரஸ் டிரஸ்ட் டவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[நீங்கள் அறிந்திறாத வியப்பூட்டும் கூகுள் ஆட் ஆன் சேவைகள்]
இதையடுத்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 சிப்செட் கொண்டு இயங்கும் சியோமி ரெட்மி 1எஸ் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு புதிய உத்தரவு வழிவகுக்கும், ஆனால் மீடியாடெக் எம்டி 6592 சிப்செட் கொண்டு இயங்கும் ரெட்மி நோட் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications