Home
News

2ஜி ஊழலின் அடையாளம்: இப்போது பாருங்க 4ஜி, 5ஜி, 6ஜி என முன்னேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி

டிராய் என்று அழைக்கப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. குறிப்பாக இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சுட்டிக்காட்டி அந்த கட்சியை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.

டிராய் கடந்த 1997-ல்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த 1997-ல் துவங்கப்பட்டது. பின்பு இதன் 25-ம் ஆண்டு நிகழ்வு நேற்றுகொண்டாடப்பட்டது. பின்பு இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற மோடி, 5ஜி அலைக்கற்றை சோதனையைதுவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியல் பேசிய மோடி, கட

குறிப்பாக இந்த நிகழ்ச்சியல் பேசிய மோடி, கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். பின்பு 2ஜி சகாப்தம் என்பது ஊழலின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது பயன்படுத்தும் 4ஜி நாடு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள ஏதுவாக உள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ந்தியா இன்று உலகின் மிகப்பெரிய

அதேபோல் இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக உள்ளது. பின்பு ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்ததால் இந்தியாவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளது. மேலும் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200-ஆக அதிகரித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்தை

அதேபோல் கிராமங்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதில் இது பெரும் பங்கு வகிக்கும். பின்பு நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. பின்பு இந்த 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும்பெருமையான விஷயம், இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, வளர்ச்சியின் வேகத்தையும் வேலைவாயப்புகளையும் உருவாக்குகிறது.

சொல்ல வேண்டும் என்றால், விவசா

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விவசாயம் சுகாதாராம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். பின்பு இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மால் 6ஜி சேவையை துங்க முடியும்

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை துங்க முடியும். பின்பு 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்பு இதற்கெல்லாம் காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும். ஊழல்களால் முடங்கிய பல துறைகளை
நாம் மீட்டெடுத்துள்ளோம். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்றவற்றின் முன்னெடுப்புகள் இதற்கு காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
:decade of 2G scandal has been wasted!", India moves towards 5G, 6G: PM Modi: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X