புடிச்சு உள்ள போடுங்க சார்: சிறுமிகளின் ஆபாசப் படங்களை அப்லோட் செய்தவர்கள் கைது..இது ஆரம்பம்தான்!
இணையதளம் என்பது இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். இதன் மூலம் மிக வேகமான தகவல் தொடர்பு கிடைப்பதால் அனைத்து வேலைகளும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிக சுலபமாக முடிந்து விடுகிறது. இருப்பினும் இந்த இணையதளத்தால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது.

இணையத்தை சிலர் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு சிலர் இதை தேவையில்லாத காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதாவது சில ஆபாச இணைய தளங்கள் இருப்பதால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது.

ஜெர்மன் போலீசார்
இந்நிலையில் சிறுமிகளின் ஆபாசப்படங்களை பார்ப்பது, பகிர்வதுமாக செயல்பட்ட உலகின் மிகப் பெரிய நெட்வொர்க்கை ஜெர்மன் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த இணையதளம் ஒன்றில் சுமார் 4 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆபாச இணையதளம் குறித்து ஜெர்மன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பின்பு மிகவும் ரகசியமாகச் செயல்பட்ட அந்த ஆபாச இணையதளத்தை இயக்கிய 3 பேரை கைது செய்துள்ளனர் ஜெர்மன் போலீசார். அதில் முதல் குற்றவாளி ஜெர்மனியின் பாடர்பார்ன் என்ற இடத்திலும், இரண்டாவது குற்றவாளி பராகுவே நாட்டிலும், மூன்றாவது குற்றவாளி ஹம்பர்க் நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

தேவையில்லாத ஆபாச வீடியோக்கள் பலரின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் குழந்தைகளின்ஆபாச படங்களை செல்போனில் வைத்திருப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆபாச தளங்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல்துறை ஈடுபட்டு வருகிறது. பின்பு குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்தருந்தால் குற்றம் என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications