இஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை கிடையாது: ஏர்டெல்.!
இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பெண் ஒருவர் தான் ஏர்டெல் டிடிஎச் மறுஇணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டுள்ளார், அந்த சமயம் தன்னுடன் பேசிய வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி தவறாகப் பேசியதாகவும் ட்விட்டர் மூலம் ஏர்டெல் நிறுவனத்திடம் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தால் அவரது நேர்மையில் நம்பிக்கை இல்லை என்று பெண் கூறியது தற்சமயம் மிகப் பெரிய கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

நடவடிக்கை:
குறிப்பாக இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பதிவுக்கு பதிலளித்த ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர், உடனடியாக இது போன்ற
விஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி, மேலும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம், என்று
தெரிவித்துவிட்டு தனது பெயரை ஷோயப் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நேர்மை
பின்னர் பதிலளித்த அந்தப் பெண், ஒரு இஸ்லாமியரான நீங்கள் உங்கள் வேலையில் நேர்மையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றும் ஒரு இந்து பிரதிநிதியை நியமிக்குமாறும் கூறியிருக்கிறார்.

கோரிக்கை
அதன்பின்பு அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று இஸ்லாமிய ஊழியருக்குப் பதிலாக இந்து ஊழியரை நியமிப்பதாக ஏர்டெல் உறுதி
தெரிவித்துள்ளது.

ஏர்டெல்
இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை
தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








