Home
News

இப்படியெல்லாம் செய்யாதீங்க.. கஷ்டமா இருக்கு: ட்ரோன் கேமராவைத் தாக்கிய முதலை.!

இப்போது உள்ள புதிய தொழில்நுட்ப சாதனங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டு. ஆனால் அந்த தொழில்நுட்ப சாதனங்களை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

அதிநவீன ட்ரோன்கள்

அதாவது இப்போது உள்ள அதிநவீன ட்ரோன்கள் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தை உலகம் முழுவதும்அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவிலும் ட்ரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஎன்றுதான் கூறவேண்டும்.

அதிநவீன ட்ரோன்கள் இயற்கை

குறிப்பாக அதிநவீன ட்ரோன்கள் இயற்கை பேரிடர்களில் பெருமளவு கைகொடுத்து வருகின்றன. பின்பு பாதுகாப்பு பணிகளிலும் இது போன்ற ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ட்ரோன் பயன்படுத்த புதிய விதிமுறைகளை நமது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதாவது முன்பு ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்து கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

 ஆஸ்திரேலியாவில் படம் பிடித்த

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் படம் பிடித்த ட்ரோன் கேமராவை முதலை ஒன்று தாக்கியது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையின் குட்டை மேல் Dane Hirst என்ற கேமராமேன் ஆவணப்படத்தை படமாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த கேமராமேன் முதலைப்

குறிப்பாக அந்த கேமராமேன் முதலைப் பண்ணையின் குட்டை மேல் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டார். உடனே அங்குள்ள சில முதலைகள் அஞ்சி ஓடின. ஆனால் ஒரு முதலை மட்டும் உறுதியாக அங்கேயே நின்றது. குறிப்பாக அந்த ஒரு முதலை மட்டும் ட்ரோனை முறைத்தது என்று கேமராமேன் கூறினார்.

கேமராமேன், அசையாமல் இருந்த அந்த

கேமராமேன், அசையாமல் இருந்த அந்த முதலையை படம்பிடிக்க நினைத்தேன் என்று கூறினார். உடனே அதற்கு நேர் மேலே ட்ரோனை கொண்டு சென்றேன், அப்படியே குட்டையப் பார்த்தபோது அந்த முதலை செங்குத்தாக நீருக்கு வெளியே தலையைத் தூக்கியபடியே ட்ரோனை கவ்வி இழுக்கும் ஒலியை கேட்க முடிந்தது. அவ்வளவுதான் ட்ரோன் கேமரா சேதமானது.

ஒருவழியாக அந்த முதலை

அதன்பின்பு ஒருவழியாக அந்த முதலை அந்த ட்ரோனை விட்டுச் சென்று விட்டது. ஆனால் அந்த ட்ரோனில் பதிவானதை மீட்க முடிந்தது என்று அந்த கேமராமேன் தெரிவித்தார். இதேபோல் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள எவர்கிளாட்ஸ் பகுதியில் இருக்கும் பூங்காவில் சுற்றலாப் பயணிகள் நீரோடைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அந்த சமயம் நீருக்குள் முதலை இருப்பதைக் கண்ட அவர்கள், ட்ரோன் மூலம் அதனை வீடியோவாக எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அவர்கள் அனுப்பிய அந்த ட்ரோன் ஆனது

மேலும் அவர்கள் அனுப்பிய அந்த ட்ரோன் ஆனது கரைக்கு அருகாமையில் நீரில் இருந்த முதலைக்கு அருகில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் ஒருவித ஒலியுடன் டிரோன் இருந்ததால் அந்த முதலை தீடிரென ட்ரோனை கவ்வி விழுங்கியது. பின்பு அந்த ட்ரோனை கவ்விய சிறுது நேரத்தில் முதலையின் வாயில் இருந்து குபுகுபுவென புகை வெளிவரத் தொடங்கியது.கரையில் இருந்த அந்த சுற்றலாப் பயணிகள், முதலை ட்ரோன் கேமராவை கவ்வியதை மற்றொரு கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த வீடியோவை சுந்தர் பிச்சை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். பின்பு இந்த
வீடியோ யூடியூப்பிலும் வைரலாக பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
crocodile that attacked the high-tech drone camera.! Do you know where?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X