தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆன்லைன்.! ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது!
இந்த அளவுக்கு அவர்கள் இனி வசமாக மாட்டிக் கொள்வார் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர்களின் குற்றப்பிண்ணி குறித்து அவர்களின் முழுவிவரங்களும் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் ச
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றம் செய்திருந்தால், அவர்கள் இனிமேல் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.
இந்த அளவுக்கு அவர்கள் இனி வசமாக மாட்டிக் கொள்வார் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும் அவர்களின் குற்றப்பின்னணி குறித்து அவர்களின் முழுவிவரங்களும் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டிய இட முடியாத நிலை ஏற்படும். மேலும் இச்செய்தியறிந்த பொது மக்களும் ஏராளமானோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மிசோராம் தேர்தல்:
தற்போது மிசோராம் தேர்தல் நடக்க இருக்கின்றது. இதையொட்டி ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகின்றது. மாநிலத்தில் எவ்வாறு தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுபதிவு, ஓட்டு எண்ணிக்கை, வேட்பாளர்களை எவ்வாறு அனுமதிப்பது, எவ்வாறு அவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை:
அரசியலில் குற்றவாளிகளுக்கு பதவியடைவதைத் தடுக்கும் உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார்.

மிசோராம் மாநில தேர்தல் ஆய்வு:
இதையொட்டி மிசோராமில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆய்வு பணிகள் கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

உன்னிபாக கவனிக்கின்றது ஆணையம்:
அவர் பேசியதாவது: போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும், வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவத்தனைகள் மேற்கொள்ளப்படுவதையும் ஆராயவும் தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.

உச்சநீதிமன்ற உத்தரவு:
அரசியயில் புகலிடம் தேடும் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையல், கிரிமினல் வழக்குள் குறித்து வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதனை கடுமையாக பின்பற்றுவோம் என்று ராவத் தெரிவித்தார்.

இணையதளத்தில் பதிவேற்றம்:
குற்ற பிண்ணணி உடைய வேட்பாளர்கள் இனி ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால், அவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், அவர்களுக்கு சட்ட பிரச்னை மற்றும் குற்றங்களில் இருந்தும் தப்ப முடியாது.


Click it and Unblock the Notifications